டிடிவி தினகரனுக்கும், சுகேஷ் சந்திரசேகருக்கும் எந்த தொடர்பும் இல்லை - தீபா

  • IndiaGlitz, [Friday,April 21 2017]

அதிமுகவின் சின்னமான இரட்டை இலை சின்னத்தை பெறுவதற்காக டிடிவி தினகரன் லஞ்சம் கொடுத்ததாக தொடரப்பட்ட வழக்கில் நாளை டெல்லி போலீசார் முன் டிடிவி தினகரன் ஆஜராகி விளக்கமளிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் டெல்லி போலீசாரால் கைது செய்யப்பட்டிருக்கும் சுகேஷ் சந்திரசேகரின் வழக்கறிஞர் தீபா முருகேசன் இன்று டெல்லி நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளர். அந்த மனுவில், 'டிடிவி தினகரனுக்கும், சுகேஷ் சந்திரசேகருக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும் இது அரசியல் காரணங்களுக்காக போடப்பட்ட வழக்கு என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த மனுமீதான விசாரணை விரைவில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் டெல்லி போலீசார் முன் ஆஜராவதற்கு தனக்கு மூன்று நாள் கால அவகாசம் வேண்டும் என்று தினகரன் தரப்பு டெல்லி போலிசாரிடம் கேட்டுக்கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் இந்த அவகாசத்தை டெல்லி குற்றப்பிரிவு போலீஸார் நிராகரித்தனர். இதையடுத்து, நாளை டெல்லியில் தினகரன் ஆஜராகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

More News

'பாகுபலி' பிரச்சனை குறித்து சத்யராஜ் வெளியிட்டுள்ள பரபரப்பு அறிக்கை

எஸ்.எஸ்.ராஜமெளலி இயக்கிய 'பாகுபலி 2' படத்தில் கட்டப்பா என்ற கேரக்டரில் நடித்துள்ள சத்யராஜ், கன்னட மக்களின் மனதை புண்புடும்படி கடந்த ஒன்பது வருடங்களுக்கு முன் பேசியதால், அவர் மன்னிப்பு கேட்கும் வரை கர்நாடகாவில் பாகுபலி 2 படத்தை வெளியிட அனுமதிக்க மாட்டோம்' என்று கன்னட அமைப்புகள் கூறி வந்தன.

தல ரசிகர்களே! இந்த இரண்டையும் பெல்கிரேடுக்கு அனுப்புங்கள். விவேக் ஓபராய்

தல அஜித் நடித்து வரும் 'விவேகம்' படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு ஐரோப்பிய நாடுகளில் நடந்து வரும் நிலையில் மிக விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது...

ஜெ.தீபா கணவரின் புதிய கட்சியின் பெயர் அறிவிப்பு

எம்.ஜி.ஆர் அவர்களால் தொடங்கப்பட்டு ஜெயலலிதாவால் கட்டுக்கோப்பாக காப்பாற்றப்பட்ட அதிமுக தற்போது மூன்று அணிகளாக உள்ள நிலையில் அதிமுகவின் அடுத்த தலைவராக வருவார் என்று கடந்த சில மாதங்களுக்கு முன் எதிர்பார்க்கப்பட்ட ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா, கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் புதிய கட்சியை தொடங்கினார்...

தனுஷ்-மதுரை தம்பதியினர் வழக்கில் பரபரப்பு தீர்ப்பு

பிரபல நடிகரும், சூப்பர் ஸ்டார் ரஜினியின் மருமகனுமான தனுஷை தங்கள் மகன் என்றும், சிறு வயதில் தங்களை விட்டு பிரிந்து சென்ற தனுஷை தங்களுடன் சேர்த்து வைக்க வேண்டும் என்றும் மதுரையை சேர்ந்த கதிரேசன், மீனாட்சி தம்பதியினர் மதுரை ஐகோர்ட் கிளையில் வழக்கு தொடர்ந்தனர்...

ஆரம்பமே அட்டகாசம்: சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு ஜீவா நன்றி

'லொள்ளுசபா' ஜீவா நடிப்பில் உருவாகியுள்ள 'ஆரம்பமே அட்டகாசம்' படத்தின் படப்பிடிப்பு முடிந்து விரைவில் இந்த படம் வெளியாகவுள்ள நிலையில் இந்த படத்தின் இசை வெளியீடு சற்று முன்னர் நடைபெற்றது...