தியாக செம்மல் தினகரனே வருக வருக! அப்ப காந்தி, காமராஜர் எல்லாம் யார்?

  • IndiaGlitz, [Saturday,June 03 2017]

சுதந்திர போராட்ட காலத்தில் வெள்ளையனை எதிர்த்து சிறை சென்ற காந்தி, காமராஜர் போன்ற தியாக செம்மல்கள் விடுதலையானபோது கூட இந்த வரவேற்பு இருந்திருக்குமா? என்பது சந்தேகம் தான். ஆனால் தேர்தல் கமிஷன் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக சிக்கிய வழக்கில் தினகரன் விடுதலையாகி, அதுவும் ஜாமீனில் விடுதலையானதற்கு அதிமுக அம்மா அணியினர் ஆரவாரம் பொதுமக்களையும் அரசியல் விமர்சகர்களையும் முகம் சுழிக்க செய்துள்ளது.

நேற்று டெல்லி நீதிமன்றம் தினகரனுக்கு ஜாமீன் வழங்கியதை அடுத்து அவர் திகார் சிறையில் இருந்து விடுதலையாகி இன்று சென்னை திரும்பினார். விமான நிலையத்தில் இருந்து தினகரன் வீடு உள்ள அடையாறு பகுதி வரை அதிமுக அம்மா அணியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

தாரை தப்பட்டை, மேளம், குத்தாட்டம், கொடி, தோரணம், பளபளக்கும் பிளக்ஸ் போர்டு, அதில் தியாக செம்மல் தினகரனே வருக வருக என்ற வாசகம் என்று அதிமுக அம்மா அணியினர் அமர்க்களப்படுத்திவிட்டனர். லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் சிறை சென்றவர் தியாக செம்மல் சென்றால் சுதந்திர போராட்டத்திற்காக சிறை சென்ற காந்தி, காமராஜர் ஆகியோர்கள் யார்? என்ற கேள்வியே அனைவர் மனதிலும் எழுகிறது.

இவ்வளவுக்கும் கடந்த சில நாட்களுக்கு முன்புதான் இனிமேல் சசிகலா குடும்பத்தினர்களின் தலையீட்டை கட்சியில் அனுமதிப்பதில்லை என்று முதல்வர், சீனியர் அமைச்சர்கள் உள்பட பலர் முடிவெடுத்தனர். இந்த நிலையில் தினகரனுக்கு கொடுக்கப்பட்டிருக்கும் வரவேற்பு கொஞ்சம் ஓவராக இருப்பதாக அரசியல் விமர்சகர்கள் விமர்சனம் செய்கின்றனர்.

அரசியலில் ஆடம்பரம் இல்லாமல் சாணக்கியத்தனத்துடன் செயல்படுபவர் மட்டுமே வெற்றி பெற முடியும் என்பதையும் அவசர முடிவும், ஆடம்பரமும் அழிவுப்பாதைக்கே கொண்டு செல்லும் என்பதையும் தினகரன் எப்போது புரிந்து கொள்வார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

More News

சந்தானம் நடித்த 'சர்வர் சுந்தரம்' ரிலீஸ் எப்போது?

காமெடி நடிகரில் இருந்து ஹீரோவாக பதவி உயர்வு பெற்ற சந்தானம் 'தில்லுக்கு துட்டு', 'இனிமே இப்படித்தான்' போன்ற படங்களை அடுத்து தற்போது நடித்து முடித்துள்ள திரைப்படம் 'சர்வர் சுந்தரம். இந்த படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகள் முடிவடைந்து தற்போது சென்சாருக்கும் அனுப்பியாகிவிட்டது...

சன்னிலியோனுக்கு கிடைக்கும் மரியாதை கூட எனக்கு இல்லை. வேலுபிரபாகரன்

பிரபல இயக்குனர் வேலுபிரபாகரன் இன்று நடிகை ஷெர்லியை திருமணம் செய்த நிலையில் அவர் அளித்த பரபரப்பான பேட்டி ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. இந்த பேட்டியில் இன்றைய காலத்தில் ஆபாசம் அனைவரின் கையில் உள்ளது என்றும், ஆபாச படங்களையும் நாம் இயக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்...

'மாரி 2' படம் குறித்த முக்கிய அறிவிப்பு. பாலாஜி மோகன்

தனுஷ், காஜல் அகர்வால் நடிப்பில் பாலாஜி மோகன் இயக்கத்தில் கடந்த 2015ஆம் ஆண்டு வெளிவந்த வெற்றி திரைப்படம் 'மாரி'. அனிருத்தின் அட்டகாசமான இசையில் உருவான இந்த படத்தின் இரண்டாம் பாகம் மிக விரைவில் தொடங்கவிருப்பதாக இயக்குனர் பாலாஜி மோகன் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கூறியதை ஏற்கனவே பார்த்தோம்...

மோகன்லாலின் 'வில்லன்' படத்தில் இணைந்த பிரபல தமிழ் நடிகை

கேரள சூப்பர்ஸ்டார் மோகன்லால் நடிப்பில் உன்னிகிருஷ்ணன் இயக்கி வரும் திரைப்படம் 'வில்லன்'. இந்த படத்தில் மோகன்லால் முன்னாள் காவல்துறை அதிகாரி மாத்யூ மஞ்சூரன் கேரக்டரில் நடித்து வருகிறார்...

தனது பட நாயகியை திருமணம் செய்த 60 வயது பிரபல இயக்குனர்

பிரபல இயக்குனர் வேலுபிரபாகரன் இன்று சென்னையில் உள்ள பிரிவியூ திரையரங்கில் தான் இயக்கிய 'ஒரு இயக்குனரின் காதல் கதை' பிரிவியூ காட்சியின் போது நடிகை ஷிர்லியுடன் திருமணம் செய்யவுள்ளதை அறிவித்தார்...