close
Choose your channels

என்ன பேசுகிறோம் என்பது ரஜினிக்கே புரிவதில்லை: டிடிவி தினகரன்

Tuesday, August 21, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கடந்த ஆண்டே அரசியலுக்கு கட்சி ஆரம்பித்து வரவுள்ளதாக கூறியபோதிலும் இன்னும் அவரது கட்சி குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை. மேலும் அவர் அதிமுகவில் அல்லது பாஜகவில் இணைவார் என்ற வதந்தியும் அவ்வப்போது எழுந்து வருகிறது.

இந்த நிலையில் பாஜகவினர் தவிர கிட்டத்தட்ட அனைத்து கட்சி பிரமுகர்களும் ரஜினியை அவ்வப்போது விமர்சனம் செய்து வருகின்றனர். குறிப்பாக ரஜினிகாந்த் தூத்துக்குடிக்கு சென்று திரும்பிய பின்னர் அதிகம் விமர்சிக்கப்படுகிறார்

இந்த நிலையில் அம்மா மக்கள் முன்னேற்ற கட்சியின் துணை பொதுச்செயலாளரும் ஆர்.கே. நகர் தொகுதியின் எம்.எல்.ஏவுமான டிடிவி தினகரன் இன்று செய்தியாளர்களிடம் ரஜினிகாந்த் குறித்து கூறியதாவது: கருணாநிதிக்கு மெரீனாவில் இடம் தராமல் இருந்திருந்தால் நானே போராடியிருப்பேன் என்று கூறுகிறார். ஆனால் அதே நேரத்தில் தூத்துகுடியில் போராட்டம் செய்தால் தமிழ்நாடே சுடுகாடாகிவிடும் என்றும் கூறுகிறார். அவருக்கு தான் என்ன பேசுகின்றோம் என்று அவருக்கே புரியவில்லை' என்று விமர்சனம் செய்தார். இந்த விமர்சனத்தை ரஜினி ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கண்டித்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.