தினகரன் கைதான சில மணி நேரத்தில் சசிகலா பேனர்கள் அகற்றம்

  • IndiaGlitz, [Wednesday,April 26 2017]

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்திற்கு பின்னர் அதிமுக, சசிகலா குடும்பத்தினர்களின் முழு கட்டுப்பாட்டில் சென்ற நிலையில் அதனை எதிர்த்து முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் தனி அணியாக பிரிந்து சென்றார். அவருக்கு பொதுமக்கள் மற்றும் தொண்டர்களின் ஆதரவு பெருமளவு இருந்தது.

இந்நிலையில் அதிமுகவின் தலைமை அலுவலகத்தில் ஜெயலலிதாவின் மறைவிற்கு பின்னர் சசிகலாவின் பேனர்களும் போஸ்டர்களுமே பெருமளவில் ஆக்கிரமித்திருந்தது. ஆனால் நேற்று தினகரன் கைது செய்யப்பட்ட செய்தி வெளியானதும் இன்று காலை முதல் அதிமுக அலுவலகத்தில் சசிகலாவின் அனைத்து பேனர்கள் முழுமையாக அகற்றப்பட்டு மீண்டும் ஜெயலலிதாவின் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளது.

டெல்லி சிறையில் தினகரனும், பெங்களூர் சிறையில் சசிகலாவும் இருக்கின்றனர். சசிகலா குடும்பத்தின் மற்ற உறுப்பினர்கள் இந்த இருவருக்கும் கிடைத்த நிலையை கண்டு அஞ்சி, அரசியல் தலையீட்டில் இருந்து ஒதுங்கி உள்ளனர். எனவே நீண்ட வருடங்களுக்கு பின்னர் சசிகலா குடும்பத்தின் ஆதிக்கம் இல்லாத ஒரு புத்துணர்ச்சி அதிமுக உருவாகும் சூழல் ஏற்பட்டுள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

More News

தாதா சாகேப் பால்கே விருது வென்ற இயக்குனருக்கு ரஜினிகாந்த் வாழ்த்து

பழம்பெரும் தெலுங்கு இயக்குனரும் நடிகருமான கே.விஸ்வநாத் அவர்களுக்கு மத்திய அரசு சமீபத்தில் மிக உயர்ந்த விருதான தாதா சாகேப் பால்கே விருதினை அறிவித்தது...

பிரபல இயக்குனர் - ஒளிப்பதிவாளர் திடீர் மரணம்

தமிழ் திரையுலகின் பிரபல ஒளிப்பதிவாளரும், இயக்குநருமான என்.கே.விஸ்வநாதன் சென்னையில் நேற்று திடீரென காலமானார். அவர் கடந்த சில நாட்களாக அவர் உடல்நலமின்றி இருந்தாலும் திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக அவர் காலமானதாக தெரிகிறது...

டிடிவி தினகரன் நள்ளிரவில் கைது. இன்று நீதிமன்றத்தில் ஆஜர்

ஒருங்கிணைந்த அதிமுகவின் சின்னமான இரட்டை இல்லை சின்னத்தை பெறுவதற்கு லஞ்சம் கொடுத்ததாக பதிவு செய்யப்பட்ட புகாரில், டிடிவி தினகரனை டெல்லி போலீசார் கடந்த நான்கு நாட்களாக விசாரணை செய்த நிலையில் நேற்று நள்ளிரவில் அவரை கைது செய்துள்ளனர்.

முழு அடைப்பு போராட்டம் மக்களுக்கு மட்டும்தானா?

விவசாயிகளுக்காக திமுக தலைமையில் அரசியல் கட்சிகள் நடத்திய இன்றைய முழு அடைப்பு போராட்டம் சற்று முன்னர் முடிவுக்கு வந்தது

தினகரனை யார் என்றே தெரியாது! முன்னுக்கு பின் முரணாக பேசும் சுகேஷ் சந்திரசேகர்

இரட்டை இலை சின்னத்தை பெற லஞ்சம் கொடுக்க முயற்சித்தது குறித்த வழக்கு ஒன்றில் டிடிவி தினகரனிடம் நான்காவது நாளாக இன்று விசாரணை நடந்து வருகிறது.