ஆளுங்கட்சி ஊடகங்களில் முதல்வர் பெயர் இருட்டடிப்பா?

  • IndiaGlitz, [Tuesday,March 14 2017]

பொதுவாக ஆளுங்கட்சி ஊடகம் என்றாலே அரசுக்கு ஜால்ரா போடும் வகையிலும், முதல்வரின் பெருமைகளை பறைசாற்றும் விதமாகத்தான் இருக்கும். இதில் எந்த கட்சியும் விதிவிலக்கில்லை. ஆனால் முதல்முறையாக தமிழகத்தில் ஆளுங்கட்சியின் ஊடகங்கள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி குறித்த செய்திகளை இருட்டடிப்பு செய்வதாக கூறப்படுகிறது.
ஆளுங்கட்சியின் தொலைக்காட்சியிலும், ஆளுங்கட்சியின் நாளிதழ்களிலும் பெரும்பாலும் அதிமுக துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் செய்திக்கே முக்கியத்துவம் கொடுக்கப்படுவதாகவும், முதல்வர் பற்றிய மிகக்குறைவாகவே இருப்பதாகவும் அதிமுக தொண்டர்களே கூறி வருகின்றனர்
அதேபோல் அதிமுகவின் அதிகாரபூர்வ சமூக வலைத்தளங்களிலும் டிடிவி தினகரனின் பேட்டிகள், அறிக்கைகளுக்கே முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. அரசு விழாவாக இருந்தாலும் முதல்வர் எடப்பாடி பழநிச்சாமியின் செய்திகள் புறக்கணிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
அதிமுகவில் ஜெயலலிதாவை அடுத்து பன்னீர்செல்வம் ஒரு சக்திமிகுந்த தலைவராக உருவாகியது போல் இன்னொரு தலைவராக உருவாகிவிடக்கூடாது என்ற நோக்கத்தில் அதிமுக செயல்படுகிறதா? என்ற சந்தேகம் அதிமுக தொண்டர்களிடையே எழுந்துள்ளது. மேலும் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் டிடிவி தினகரன் ஒருவேளை வெற்றி பெற்றால் எடப்பாடி பழநிச்சாமியின் முதல்வர் பதவி தப்புமா? என்பதும் கேள்விக்குறியாக உள்ளது. அரசியலில் எதுவும் நடக்கலாம் என்பதால் இதுவும் நடக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

More News

இதுக்கு கூட லஞ்சமா? இந்த தலைமை ஆசிரியையை என்ன செய்யலாம்?

மாதா, பிதா, குரு தெய்வம் என தாய் தந்தையர்களுக்கு பிறகு தெய்வமாக மதிப்பளிக்கப்படுபவர்கள் ஆசிரியர்கள்.

நான் சொல்லாத விஷயத்தை எழுதி வரும் உப்புமா இணையதளங்கள். நடிகை கஸ்தூரி ஆவேசம்

சமீபத்தில் நடிகை கஸ்தூரி கூறியதாக ஒருசில இணையதளங்களில் சர்ச்சைக்குரிய செய்தி ஒன்று மிக வேகமாக பரவி வந்தது. சுசித்ரா டுவிட்டர் பிரச்சனைக்கு இணையாக இந்த செய்தி மிக வேகமாக பரவி வந்த நிலையில் இந்த செய்தி குறித்து நடிகை கஸ்தூரி விளக்கம் அளித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள வீடியோ பேட்டி ஒன்றில் கூறியிருப்பதாவது...

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல். வெற்றிக்கனியை ருசிப்பது யார்?

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வெற்றி பெற்ற தொகுதியான ஆர்.கே.நகர் தொகுதியில் வரும் ஏப்ரல் 12ஆம் தேதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. ஜெயலலிதா மறைவிற்கு பின்னர் இரு அணிகளாக பிரிந்துள்ள சசிகலா மற்றும் ஓபிஎஸ் அணியினர் தங்களுக்கு மக்கள் செல்வாக்கு இருக்கின்றது என்பதை நிரூபிக்க கிடைத்த வாய்ப்பாக இந்த இடைத்தேர்தல் கருதப்படுக&

கமல்ஹாசனை அடுத்து கருணாநிதியை வம்புக்கு இழுத்த சுப்பிரமணியன் சுவாமி

கடந்த சில நாட்களாக கமல்ஹாசனுடன் டுவிட்டர் போர் செய்து கொண்டிருந்த பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தற்போது கருணாநிதி, கச்சத்தீவை தாரை வார்க்க அப்போதைய பிரதமர் இந்திராகாந்தியிடம் பணம் பெற்றதாக திடுக்கிடும் புகார் ஒன்றை கூறியுள்ளார்...

விக்ரமின் 'துருவ நட்சத்திரம்' படத்தில் இணைந்த இன்னொரு நாயகி

பிரபல இயக்குனர் கவுதம் மேனன் இயக்கத்தில் சீயான் விக்ரம் மூன்று வித்தியாசமான வேடங்களில் நடித்து வரும் திரைப்படம் 'துருவ நட்சத்திரம்'. இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் இந்த படத்தில் பிரபல நாயகி ஒருவர் இணைந்துள்ளார்...