close
Choose your channels

தூத்துகுடியில் மெல்ல திரும்பும் இயல்பு நிலை: கடைகள் திறப்பு, போக்குவரத்து ஆரம்பம்

Friday, May 25, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தூத்துகுடியில் நடைபெற்ற துப்பாக்கி சம்பவத்தில் 13 பேர் பரிதாபமாக பலியான நிலையில் அம்மாவட்டம் முழுவதும் கடந்த மூன்று நாட்களாக பதட்ட நிலை இருந்தது. மேலும் அங்கு 144 தடை உத்தரவு அமலில் இருந்தாலும் நேற்று புதியதாக பதவியேற்ற கலெக்டர் சந்தீப் அவர்களின் நடவடிக்கையால் இன்று ஓரளவுக்கு இயல்பு நிலை திரும்பியுள்ளது.

நேற்று மாலையே அத்தியாவசிய பொருட்களான மருந்துகள், பால் கிடைத்த நிலையில் இன்று மளிகை, காய்கறி கடைகள் திறக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வந்து கொண்டிருக்கின்றது. மேலும் ஒருசில இடங்களுக்கு பலத்த பாதுகாப்புடன் பேருந்துகள் இயக்கப்படவுள்ளதாகவும், கார், இருசக்கர வாகனங்கள் தற்போது சாலைகளில் இயங்கி வருவதாகவும் கூறப்படுகிறது.

மேலும் கடைகள் திறக்கப்படாததால் உணவு பொருட்களின் தட்டுப்பாடு இருந்ததால் தூத்துகுடி மக்களின் பசியை போக்க அம்மா உணவகங்களில் இலவச உணவு வழங்கப்பட்டு வருகின்றன. மேலும் தனியார் உணவகங்களிலும் மலிவு விலையில் உணவு கிடைப்பதால் பொதுமக்கள் ஓரளவு நிம்மதி அடைந்துள்ளனர்., எனவே இன்று மாலைக்குள் தூத்துகுடியில் சகஜ நிலை திரும்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.