close
Choose your channels

நான், மரணப்படுக்கையில் இருக்கிறேன்! இறப்பதற்கு சில நிமிடங்களுக்கு முன் நடிகையின் பதிவு

Monday, July 13, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல தொலைக்காட்சி நடிகை ஒருவர் மரணம் அடைவதற்கு சில நிமிடங்களுக்கு முன் தனது சமூக வலைத்தள பக்கத்தில் நான் செல்ல வேண்டிய நேரம் வந்துவிட்டது. 'நான், மரணப்படுக்கையில் இருக்கிறேன்’ என்று பதிவு செய்துவிட்டு மரணம் அடைந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிரபல டிவி சீரியல் நடிகை திவ்யா சாக்சி. கடந்த 2011ஆம் ஆண்டு மிஸ் யுனிவர்ஸ் பட்டம் வென்ற இவர் ஒருசில இந்தி திரைப்படங்களிலும் நடித்துள்ளார். இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த திவ்யா அதற்காக சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் சிகிச்சையின் பலனின்றி நேற்று அவர் மரணம் அடைந்தார். இவரது மரணத்தை உறவினர்கள் உறுதிசெய்துள்ளனர்.

மரணப்படுக்கையில் இருந்தபோது திவ்யா சாக்சி தனது சமூக வலைத்தளத்தில் கடைசியாக பதிவுசெய்தபோது, ‘நான் சொல்ல நினைப்பதை வெளிப்படுத்த போதுமான வார்த்தைகள் இல்லை. சில மாதங்களாகத் தப்பி ஓடி, இப்போது சொல்ல வேண்டிய நேரம் வந்துவிட்டது. நான், மரணப்படுக்கையில் இருக்கிறேன்! இருந்தாலும் வலுவாக இருக்கிறேன். வலி இல்லாத மற்றொரு வாழ்க்கை கிடைக்கட்டும். தயவு செய்து கேள்விகள் வேண்டாம். என்னை நீங்கள் எவ்வளவு அர்த்தப்படுத்துகிறீர்கள் என்பது கடவுளுக்கு மட்டுமே தெரியும்’ என்று பதிவு செய்துள்ளார்.

திவ்யாவின் மரணத்திற்கு பாலிவுட் திரையுலக பிரபலங்கள் மற்றும் அவரது ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.