லாக்டவுனால் மீளமுடியாத கடன்: தூக்கில் தொங்கி நடிகர் தற்கொலை

கொரோனா வைரஸ் காரணமாக கடந்த இரண்டு மாதங்களாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ள காரணத்தினால் ஏழை எளிய மக்கள் பெரும் பாதிப்பு அடைந்துள்ளனர். குறிப்பாக திரையுலகில் தினந்தோறும் கூலி வாங்கி வேலை செய்த ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் சாப்பாட்டுக்கே வழி இல்லாமல் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கின்றனர்.

இந்த நிலையில் தொழிலாளர்கள் மட்டுமின்றி ஒரு சில நடிகர்களும் வறுமையில் இருக்கிறார்கள் என்பதும் அந்த நடிகர்களில் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட தகவல் தற்போது வெளிவந்து அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

மும்பையை சேர்ந்த சின்னத்திரை நடிகர் மன்மீத் கிரேவல் என்பவர் லாக்டவுன் காரணமாக ஏற்பட்ட வறுமையால் தற்கொலை செய்து கொண்டதாக தகவல்கள் வெளிவந்தது. மும்பையைச் சேர்ந்த மன்மீத் கிரேவல் சில ஹிந்தி டிவி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவதோடு விளம்பர படங்களிலும் நடித்துள்ளார். கடந்த இரண்டு மாதங்களாக எந்தவித வாய்ப்பும் இல்லாமல் கடன் தொல்லைக்கு ஆளாகியுள்ளதாக தெரிகிறது. இதனையடுத்து கடன்காரர்கள் கடனைக் கேட்டு நெருக்கியதால் மன விரக்தி அடைந்த அவர் தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார்.

லாக்டவுன் வறுமை காரணமாக சின்னத்திரை நடிகர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட தகவல் சின்னத்திரை நடிகர், நடிகைகள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

More News

ஒரு தடவை ஜெயிச்சா பத்தாது! ஓவ்வோரு தடவையும் ஜெயிக்கணும்: சிவகார்த்திகேயனுக்கு டுவீட் போட்ட கலெக்டர்

தமிழகத்தில் சென்னை உள்பட ஒருசில மாவட்டங்களில் மட்டும் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகமாக இருந்தாலும் ஒரு சில மாவட்டங்களில் கொரோனா வைரஸ் மிகவும் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது

மணிரத்னம் படம் மிஸ் ஆனது எப்படி? மனம் திறந்த 'மாஸ்டர்' நடிகர்

பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கிவரும் 'பொன்னியின் செல்வன்' திரைப்படத்தில் ஏற்கனவே கிட்டத்தட்ட கோலிவுட் திரையுலக பிரபலங்கள் அனைவரும் நடித்து வருகின்றனர் என்பது தெரிந்ததே.

ஓடிடியில் வெளியாகும் ஐந்து மொழி திரைப்படம்: திரையரங்கு உரிமையாளர்கள் அதிர்ச்சி

கொரோனா வைரஸ் காரணமாக கடந்த இரண்டு மாதங்களாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ள காரணத்தினால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளது

திரையரங்குகளில் மதுபானங்கள்: பிரபல இயக்குனரின் ஐடியா

கொரோனா வைரஸ் காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக கடந்த இரண்டு மாதங்கள் திரையரங்குகள் மூடப்பட்டுள்ளன. மூன்றாம் கட்ட ஊரடங்கு இன்றுடன் முடிந்தாலும், மேலும் நீட்டிக்க வாய்ப்பு இருப்பதாக

புலிக்கு பிறந்தது பூனையாகுமா? 'தல' மகளின் பைக் ரைடிங்

தல என்று கிரிக்கெட் ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்படும் தோனி, மிகச்சிறந்த கிரிக்கெட் வீரர் மட்டுமின்றி சிறந்த பைக் பிரியர் என்பது தெரிந்ததே. இந்த கொரோனா விடுமுறையிலும் தனது மகளை பின்னால் உட்கார