close
Choose your channels

சின்னத்திரை நடிகை நிலானி திடீர் தலைமறைவு: போலீசார் வலைவீச்சு

Saturday, September 22, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கடந்த சில நாட்களாகவே ஊடகங்களில் 'தலைமறைவு' என்ற வார்த்தை அடிக்கடி நடமாடுகிறது. அந்த வகையில் இன்று சின்னத்திரை நடிகர் நிலானி தலைமறைவாகிவிட்டதாக கூறப்படுகிறது.

சின்னத்திரை நடிகை நிலானி, காதலர் காந்தி லலித்குமார் தன்னை திருமணம் செய்து கொள்ள வற்புறுத்துவதாக போலீஸ் புகார் கொடுத்தார். இந்த புகாரின் மீது விசாரணை நடந்து கொண்டிருந்தபோது திடீரென காந்தி லலித்குமார் தற்கொலை செய்து கொண்டார்.

இதனையடுத்து காந்தி லலித்குமார் தற்கொலைக்கு நிலானியே காரணம் என அவருடைய உறவினர்கள் புகார் கூறியதால் மனமுடைந்த நிலானி நேற்று முன் தினம் திடீரென தற்கொலைக்கு முயன்றார். பின்னர் அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று உடல்நலம் தேறிய நிலையில் அவர் மீது தற்கொலை முயற்சி வழக்கை போலீசார் பதிவு செய்தனர்.

இந்த நிலையில் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆன நிலானி திடீரென தலைமறைவாகிவிட்டதாகவும், அவருடைய செல்போன் சுவிட்ச் ஆப் ஆகிவிட்டதாகவும், அவருடைய இரண்டு குழந்தைகள் எங்கே இருக்கின்றார்கள் என்பதும் தெரியவில்லை என்றும் கூறப்படுகிறது. இதனையடுத்து நிலானியை போலீசார் தேடி வருகின்றனர்.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.