close
Choose your channels

போதை மருந்து கொடுத்து பலாத்காரம் செய்ததாக நடிகை திடுக்கிடும் புகார்!

Sunday, November 17, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

மும்பையை சேர்ந்த தொலைக்காட்சி நடிகை ஒருவர், தன்னை துணை நடிகர் ஒருவர் ஏமாற்றி பாலியல் பலாத்காரம் செய்து விட்டதால், தான் கர்ப்பமாக இருப்பதாக போலீசில் புகார் அளித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மும்பையை சேர்ந்த தொலைக்காட்சி மற்றும் சினிமா நடிகை ஒருவருக்கும் துணை நடிகர் ஒருவருக்கும் கடந்த சில மாதங்களாக நட்பு இருந்து வந்திருக்கிறது. இருவரும் இணைந்து ஒருசில தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளனர்.

இந்த நிலையில் தொலைக்காட்சி நடிகை மற்றும் துணை நடிகர் ஆகிய இருவரும் ஹோட்டலில் அறை எடுத்து தங்கி இருந்தனர். அப்போது தொலைக்காட்சி நடிகைக்கு துணை நடிகர் போதை மருந்து கொடுத்து, அவர் மயக்கத்தில் இருந்தபோது அவரை பாலியல் பலாத்காரம் செய்துள்ளதாக தெரிகிறது. இதனை அடுத்து தொலைக்காட்சி நடிகை தற்போது கர்ப்பமாக இருப்பதாகவும் தன்னை ஏமாற்றி பாலியல் பலாத்காரம் செய்ததால் தன்னை திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்றும் துணை நடிகரை வலியுறுத்தியதாக தெரிகிறது. ஆனால் திருமணத்திற்கு துணை நடிகர் சம்மதிக்கவில்லை.

இந்த நிலையில், தான் மயக்கமாக இருந்த நேரத்தில் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக துணை நடிகர் மீது நடிகை போலீசில் புகார் அளித்துள்ளார். இந்த நிலையில் துணை நடிகர் தலைமறைவாகியுள்ளதாகவும், அவரை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.