சுஷாந்தை அடுத்து பெண் தொகுப்பாளினி தற்கொலை: மன அழுத்தம் காரணமா?

  • IndiaGlitz, [Sunday,August 02 2020]

பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த்சிங் ராஜ்புட் அவர்கள் மன அழுத்தம் காரணமாக தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தின் பாதிப்பு இன்னும் மீளாத நிலையில் தற்போது மேலும் ஒரு பிரபலம் மன அழுத்தம் காரணமாக தற்கொலை செய்து கொண்டிருப்பதாக வெளி வந்திருக்கும் செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக இருந்து அதன்பின் தொகுப்பாளினியாகவும் புகழ் பெற்றவர் பிரியா ஜூனேஜா. இவர் கடந்த சில நாட்களாக மன அழுத்தத்தில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் பிரியா ஜூனேஜா தனது வீட்டின் மின்விசிறியில் திடீரென தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் விரைந்து சென்று அவரது சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இந்த தற்கொலை குறித்த முதல் கட்ட விசாரணையில் அவர் மன அழுத்தம் காரணமாக தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என கருதப்படுகிறது.

மேலும் அவருடைய மன அழுத்தத்திற்கு என்ன காரணம் என்ற விசாரணை தற்போது நடைபெற்று வருகிறது சுஷாந்தின் தற்கொலையின் பாதிப்பு முடிவடைதற்குள் மேலும் ஒரு பிரபலம் மன அழுத்தம் காரணமாக தற்கொலை செய்து கொண்டிருப்பது திரையுலகினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

More News

இயக்குனராகும் நடிகர்: ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரை வெளியிட்ட சிவகார்த்திகேயன் 

தமிழ் நடிகர் ஒருவர் இயக்குனராகியுள்ள நிலையில் அவருடைய முதல் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் சிவகார்த்திகேயன் தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்

தமிழக கவர்னருக்கு கொரோனா பரிசோதனை: சென்னை மருத்துவமனையில் அனுமதி!

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அவர்கள் தங்கியிருக்கும் ராஜ்பவனில் ஏற்கனவே மூன்று பேருக்கும் கொரனோ தொற்று உறுதியாகியுள்ள நிலையில்

நானும் ஒரு நாள் அஜித் போல் மாறுவேன்: மீராமிதுன் ஆவேசம்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தளபதி விஜய், நடிகர் சூர்யா, நடிகை த்ரிஷா உள்பட பலரை சர்ச்சைக்குரிய வகையில் தொடர்ந்து விமர்சனம் செய்து வரும் நடிகை மீரா மிதுன்,

முதல்வர் மகன் குறித்த விமர்சனம்: பிரபல நடிகையின் வீட்டில் நடந்த துப்பாக்கி சூட்டால் பரபரப்பு

முதலமைச்சரையும் முதலமைச்சர் மகனையும் சர்ச்சைக்குரிய வகையில் விமர்சனம் செய்த பிரபல நடிகை ஒருவரின் வீட்டில் மர்ம நபர் ஒருவர் துப்பாக்கிச் சூடு நடத்தியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 

அபிராமி திரையரங்க உரிமையாளருக்கு மத்திய அரசு செய்த கெளரவம்!

இந்தியாவில் சாதனை செய்த பலரது உருவம் பதித்த தபால் தலைகள் அவ்வப்போது வெளியிட்டு வரும் நிலையில் தற்போது சென்னை அபிராமி திரையரங்க உரிமையாளர் ராமநாதன்