டிவி தொகுப்பாளினியை தீர்த்தம் கொடுத்து ஏமாற்றிய பூசாரி.. போலீஸ் விசாரணையில் அதிர்ச்சி தகவல்..!


Send us your feedback to audioarticles@vaarta.com


டிவி தொகுப்பாளனி மற்றும் நடிகையை தீர்த்தம் கொடுத்து பூசாரி ஏமாற்றி பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் சென்னையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையை சேர்ந்த டிவி தொகுப்பாளினி மற்றும் துணை நடிகை விருகம்பாக்கத்தில் தங்கி பணி செய்து வரும் நிலையில் அவருக்கு சமீபத்தில் பூசாரி ஒருவருடன் நட்பு கிடைத்துள்ளது. அந்த நட்பின் அடிப்படையில் அடிக்கடி இருவரும் வாட்ஸ் அப் செயலி மூலம் பேசிக் கொண்டதாகவும் ஒரு கட்டத்தில் அந்த பூசாரி அந்த நடிகையின் வீட்டிற்கு வந்ததாகவும் தெரிகிறது.
அப்போது அவர் அம்பாள் தீர்த்தம் என்று ஒரு தீர்த்தத்தை கொடுத்த நிலையில் அதை குடித்த நடிகை திடீரென மயங்கி விழுந்தவுடன் அவரை படுக்கை அறைக்கு அழைத்துச் சென்று அந்த பூசாரி உல்லாசமாக இருந்ததாக கூறப்படுகிறது. இதனை அடுத்து கண்விழித்து பார்த்த அந்த நடிகை நிர்வாணமாக இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்து உடனே பூசாரிக்கு போன் செய்தபோது உன் அழகில் மயங்கி அவ்வாறு தவறு செய்து விட்டேன், நாம் இருவரும் திருமணம் செய்து கொள்ளலாம் என்று வாக்குறுதி அளித்துள்ளார்.
இதையடுத்து இருவரும் திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வந்த நிலையில் திடீரென அந்த நடிகை கர்ப்பமானார். இந்த நிலையில் பூசாரி, விஐபி ஒருவரின் வீட்டிற்கு தன்னை அழைத்துச் சென்று தவறாக பயன்படுத்த முயன்ற போது தான் அவருக்கு சந்தேகம் வந்தது.
இதனை அடுத்து அவர் காவல்துறையில் புகார் அளித்த நிலையில் காவல்துறையினர் பூசாரி மீது வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். முதல் கட்ட விசாரணையில் அந்த பூசாரியின் பெயர் கார்த்திக் என்றும் அவருடைய மொபைல் போனில் பல பெண்களின் ஆபாச புகைப்படங்கள் வீடியோக்கள் இருப்பதையும் பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதையடுத்து அவரிடம் மேலும் விசாரணை செய்யப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments