பரந்தூர் சென்றார் தவெக தலைவர் விஜய்.. இன்னும் சில நிமிடங்களில் கிராம மக்களுடன் சந்திப்பு..!


Send us your feedback to audioarticles@vaarta.com


தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் இன்று பரந்தூர் சென்று புதிய விமான நிலையத்திற்கு எதிராக கடந்த மூன்று ஆண்டுகளாக போராடி வரும் 13 கிராம மக்களை சந்திக்கிறார் என்ற தகவல் வெளியான நிலையில் இந்த சந்திப்பு இன்னும் சில நிமிடங்களில் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை நீலாங்கரையில் உள்ள தனது இல்லத்தில் இருந்து தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் சற்றுமுன் கிளம்பி உள்ளதாகவும், பரந்தூர் உள்பட 13 கிராம மக்களை இன்று அவர் சந்திக்க அனைத்து ஏற்பாடுகளும் தயாராக இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளன.
இந்த சந்திப்பின்போது வெளியூர் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து வரும் நபர்களுக்கு அனுமதி இல்லை என்றும், அனுமதியின்றி வரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தொண்டர்கள் மற்றும் வெளி நபர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.
அடையாள ஆவணங்கள் வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் என்றும் 13 கிராம மக்கள் தான் என்பதை உறுதிப்படுத்த அவர்களிடமிருந்து ஆதார் உள்ளிட்ட அடையாள ஆவணங்களை காவல்துறை கேட்பதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் பரந்தூர் சென்ற தமிழக வெற்றி கழகத்தின் பொருளாளர் வெங்கட்ராமன் காவல்துறையால் தடுத்து நிறுத்தப்பட்டார் என்றும் அனுமதிக்கப்பட்ட வாகனங்கள் மட்டுமே உள்ளே அனுப்பப்படும் என்று காவல்துறை கூறியதால் வாக்குவாதம் ஏற்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.
இன்னும் சில நிமிடங்களில் 13 கிராம மக்களை தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் நேரில் சந்தித்து அவர்களை குறைகளை கேட்டு அறிவார் என்று கூறப்படுவதால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments