தாயின் கர்ப்பத்திற்குள் சண்டை போட்ட இரட்டையர்கள்: வைரலாகும் வீடியோ!

  • IndiaGlitz, [Wednesday,April 17 2019]

ஒரே தாய்க்கு பிறந்த அண்ணன் - தம்பி, அக்கா - தங்கை சண்டை போடுவது என்பது வாடிக்கையான ஒன்றுதான். ஏன் இரட்டையர்களாக பிறந்தாலும் அவர்களுக்குள் சண்டை வருவது சகஜம் தான். ஆனால் தாயின் கர்ப்பத்தில் இருக்கும்போதே ஒரு இரட்டையர்கள் சண்டை போட்ட வீடியோ தற்போது உலகம் முழுவதும் வைரலாகி வருகிறது.

சீனாவை சேர்ந்த 28 வயது பெண் ஒருவர் நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார். அவருக்கு இரட்டை குழந்தை பிறக்கவுள்ளது ஏற்கனவே தெரிந்திருதது. இந்த நிலையில் குழந்தையின் வளர்ச்சி குறித்து அறிய அவர் ஸ்கேன் எடுக்க மருத்துவமனைக்கு சென்றார். இந்த ஸ்கேனை பார்த்த அந்த பெண்ணும், அவரது கணவரும் ஆச்சரியம் அடைந்தனர்.

ஏனெனில் அந்த பெண்ணின் வயிற்றில் நன்கு வளர்ச்சியடைந்த இரட்டை பெண் குழந்தைகள் ஒன்றுடன் ஒன்று சண்டை போட்டும், ஒருவரை ஒருவர் தள்ளி விளையாடி கொண்டும் இருந்தது. சண்டை போடுவது மட்டுமின்றி அன்பினால் ஒருவரை ஒருவர் அணைத்து கொள்ளும் காட்சிகளும் இந்த ஸ்கேனில் இருந்து தெரிய வந்தது.

இந்த ஸ்கேன் வீடியோவை பார்த்ததும் மகிழ்ச்சி அடைந்த பெற்றோர்கள், மருத்துவர்களின் அனுமதியுடன் அந்த வீடியோவை வாங்கி தங்கள் சமூக வலைத்தளத்தில் பதிவு செய்தனர். இந்த வீடியோவிற்கு இதுவரை 25 லட்சம் லைக்ஸ்களும், 80 ஆயிரம் கமெண்ட்டுகளும் கிடைத்துள்ளது.

பிறக்கும் முன்னரே செர்ரி, ஸ்டிராபெரி என பெயர் வைத்துள்ள இந்த குழந்தையின் பெற்றோர்கள் இருவரும் பிறக்கும் தினத்தை ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

More News

ஆறு வருடம் கழித்து மூடர் கூடம் நவீனின் திருமண டுவீட் ஏன்?

'மூடர் கூடம்' என்ற ஒரே ஒரு படத்தால் கோலிவுட்டின் கவனத்தை ஈர்த்த இயக்குனர் நவீன், இந்த படத்தின் படப்பிடிப்பின்போது, அந்த படத்தில் நடித்திருந்த சிந்து என்ற நடிகையை திருமணம் செய்து கொண்டார்.

3D கண்ணாடி ஆர்டர் பண்ணிட்டேன்: விஜய்சங்கரை கிண்டல் செய்தாரா அம்பத்தி ராயுடு?

சமீபத்தில் அறிவிக்கப்பட்ட உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணியில் விராத் கோஹ்லி, தோனி, ரோஹித்சர்மா ஆகியோர்களுக்கு அடுத்தபடியாக அதிக பேட்டிங் சராசரி வைத்துள்ள அம்பத்தி ராயுடு

பாறை இடுக்கில் கிடந்த வெளிநாட்டு பெண்ணின் சடலம்! நடந்தது என்ன? பதற வைக்கும் சம்பவம்!

வெளிநாட்டை சேர்ந்த பெண் ஒருவர் சுற்றுலா வந்த இடத்தில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, முகம் சிதைக்கப்பட்ட நிலையில்

எதையும் சந்திக்க தயார்! ஐடி ரெய்டுக்கு பின் கனிமொழி பேட்டி!

தூத்துகுடி திமுக வேட்பாளர் கனிமொழி தங்கியிருந்த வீட்டில் நேற்று திடீரென வருமான வரித்துறையினர் சுமார் ஒரு மணி நேரம் சோதனை நடத்தியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

வங்கியில் இன்று கடன் வாங்கினால் நாளை தள்ளுபடி: உதயநிதி ஸ்டாலின்

கூட்டுறவு வங்கியில் இன்றே அனைவரும் கடன் வாங்குங்கள். நாளை தலைவர் ஸ்டாலின் ஆட்சிக்கு வந்தவுடன் கடன் தள்ளுபடி செய்யப்படும்