close
Choose your channels

டிவிட்டர் நிறுவனத்தின் CEO-ஆன இந்தியர்… யார் இந்த பராக் அகர்வால்?

Tuesday, November 30, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ஃபாலோயர்களைக் கொண்ட டிவிட்டர் நிறுவனத்தின் புதிய சிஇஓவாக இந்தியாவை பூர்வீகமாகக் கொண்ட பராக் அகர்வால் நியமிக்கப்பட்டு உள்ளார். இது இந்தியாவிற்கு பெருமை சேர்க்கும் விஷயமாகக் கருதப்படுகிறது.

இதுவரை டிவிட்டர் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக செயல்பட்டு வந்த ஜாக் டோர்சி நேற்று திடீரென பதவி விலகினார். இதையடுத்து அந்நிறுவனத்தில் தலைமை தொழில்நுட்ப தலைவராக (CTO) பணியாற்றி வந்த பராக் அகர்வால் புதிய சிஇஓவாக நியமிக்கப்பட்டு உள்ளார்.

இந்தியாவை பூர்வீகமாகக் கொண்ட பராக் அகர்வால் மும்பை ஐஐடி நிறுவனத்தில் பயின்று பின்னர் அமெரிக்காவின் ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தில் பி.ஹெச்டியை முடித்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. மைக்ரோசாப்ட், யாஹு  போன்ற நிறுவனங்களில் பணியாற்றிய இவர் கடந்த 2011 ஆம் ஆண்டு டிவிட்டர் நிறுவனத்தில் மென் பொறியாளராகப் பணியில் சேர்ந்தார். இதைத்தொடர்ந்து கடந்த 2017 ஆம் ஆண்டு அந்நிறுவனத்தின் தொழில்நுட்ப தலைவராகவும் நியமிக்கப்பட்டார். தற்போது டிவிட்டர் நிறுவனத்தின் புதிய சிஇஓவாக பராக் அகர்வால் நியமிக்கப்பட்டு உள்ளார்.

இதுகுறித்துப் பேசிய ஜாக் டோர்சி, டிவிட்டர் நிறுவனத்தின் தொழில்நுட்ப விஷயங்களைக் கவனித்து வந்த பராக் அகர்வால் பல இக்கட்டான சூழல்களில் நிறுவனத்தை வழிநடத்தியவர் என்றும் தொழில்நுட்ப வகையில் எளிமையான சேவையைக் கொடுப்பதற்கு உதவியவர் என்றும் தெரிவித்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.