டுவிட்டர் முன்னேற்ற கழகம்: கமல் கட்சிக்கு பெயர் செலெக்ட் செய்த எச்.ராஜா

  • IndiaGlitz, [Thursday,November 23 2017]

உலகநாயகன் கமல்ஹாசன் கடந்த சில மாதங்களாக ஆட்சியாளர்களுக்கு எதிராகவும், ஊழல்வாதிகளுக்கு எதிராகவும் தைரியமான கருத்துக்களை தெரிவித்து வருகிறார். சமூக அக்கறையுடன் அவர் தெரிவித்து வரும் கருத்துக்கள் பொதுமக்களிடையே பெரும் வரவேற்பையும், அரசியல்வாதிகளிடையே பெரும் அதிருப்தியையும் பெற்று வருகிறது.

குறிப்பாக தமிழக பாஜக தலைவர்களை கமல்ஹாசனை அவ்வப்போது கலாய்த்தும் சீண்டியும் வருகின்றனர். அந்த வகையில் பாஜகவின் தேசிய செயலாளர் தற்போது கமல் குறித்து கூறியபோது, 'கமல் கட்சி ஆரம்பித்தால் அந்த கட்சிக்கு டுவிட்டர் முன்னேற்ற கழகம்' என்ற பெயர் வைக்கலாம், அதுதான் பொருத்தமாக இருக்கும் என்று கூறியுள்ளார். மேலும் கமல் போன்றவர்கள் பொதுவாழ்க்கைக்கு வந்தால், கவுரமானவர்கள் தமிழகத்தில் வாழ முடியாது' என்றும் எச்.ராஜா கூறியுள்ளார்

எச்.ராஜாவின் இந்த கருத்து கமல் ரசிகர்களிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் அவருக்கு டுவிட்டர் மூலம் பதிலடி கொடுத்து வருகின்றனர். இந்த கருத்துக்கு கமல் என்ன பதில் சொல்ல போகிறார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

More News

அன்புச்செழியன் உத்தமர்: அவரை தவறாக சித்தரிக்க வேண்டாம்: பிரபல இயக்குனர்

அன்புச்செழியன் மிரட்டல் காரணமாக சசிகுமாரின் உறவினர் அசோக்குமார் இறந்ததாக கூறப்படும் நிலையில் கோலிவுட் திரையுலகினர் ஒட்டுமொத்தமாக திரண்டு அன்புச்செழியனுக்கு எதிராக குரல் கொடுத்து வருகின்றனர்

ரூ.20 லட்சம் கடனுக்காக ரூ.7 கோடி வீட்டை இழந்த பார்த்திபனின் கந்துவட்டி அனுபவம்

கந்துவட்டி கொடுமையால் நேற்று அசோக்குமார் தற்கொலை செய்து கொண்ட செய்தி வெளியானதும் அவரை போல இன்னும் பல திரையுலக பிரபலங்கள் கந்துவட்டி கொடுமையை அனுபவித்ததாக தெரிய வருகிறது

அசோக்குமாரிடம் எந்தவித பண வரவு-செலவும் இல்லை: கோபுரம் பிலிம்ஸ் விளக்கம்

சசிகுமாரின் உறவினர் அசோக்குமாரின் தற்கொலைக்கு பைனான்சியர் அன்புச்செழியனே காரணம் என்று கூறப்பட்டு வரும் நிலையில் அன்புச்செழியனின் கோபுரம் பிலிம்ஸ் நிறுவனம் விளக்க அறிக்கையை கொடுத்துள்ளது.

கந்துவட்டி தற்கொலை இரண்டு நாள் செய்தி மட்டுமே: டாக்டர் ராம்தாஸ்

கந்துவட்டி கொடுமையால் இயக்குனர் சசிகுமாரின் உறவினர் அசோக்குமார் நேற்று தற்கொலை செய்து கொண்ட விவகாரம் காரணமாக இன்று ஒட்டுமொத்த தமிழ் திரையுலகமே கந்துவட்டிக்கு எதிராக குரல் கொடுத்து வருகிறது.

அன்புச்செழியன் வீட்டுக்கு ரெய்டு போங்க: அரசுக்கு இயக்குனர் சுசீந்திரன் வேண்டுகோள்

பைனான்சியர் அன்புச்செழியனின் மிரட்டல் காரணமாக நேற்று இயக்குனர் சசிகுமாரின் உறவினர் அசோக்குமார் தற்கொலை செய்து கொண்ட நிலையில், தற்போது அன்புச்செழியனால் திரையுலகில் உள்ள பலர் பாதிக்கப்பட்டுள்ளது