14 ஓவர் முடிந்ததும் கதறியழுத  இளம்பெண், வெற்றி பெற்றதும் துள்ளி குதித்த காட்சி: வைரல் வீடியோ..!

  • IndiaGlitz, [Tuesday,May 30 2023]

நேற்றைய ஐபிஎல் இறுதிப்போட்டியில் 14 ஓவர் முடிவில் சென்னை அணி 6 பந்துகளில் 13 ரன்கள் எடுக்க வேண்டும் என்ற நிலையில் இருந்த போது பலருக்கு சிஎஸ்கே அணி வெற்றி பெறும் என்ற நம்பிக்கை இல்லை. குறிப்பாக 14.4 ஓவர்கள் முடிந்ததும் இரண்டு பந்துகளில் 10 ரன்கள் என்பது சாத்தியமில்லை என்றே தோன்றியது. ஆனால் அதை சாத்தியமாக்கி ஜடேஜா சிஎஸ்கே அணிக்கு வெற்றியை தேடி தந்தார்.

இந்த நிலையில் 14 ஓவர் முடிந்ததும் சிஎஸ்கே அணி தோல்வி அடைந்து விடும் என்ற எண்ணத்தில் மைதானத்தில் நேரடியாக பார்த்துக் கொண்டிருந்த இளம் பெண் ஒருவர் கதறி அழுத வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. 14.4 ஓவர் வரை அவர் அழுது கொண்டிருந்த நிலையில் அதனை அடுத்து ஒரு சிக்சர் மற்றும் ஒரு பவுண்டரி அடித்து சிஎஸ்கே வென்றவுடன் அதே பெண் மகிழ்ச்சியில், ஆனந்த கண்ணீரில் துள்ளிக்குதித்த காட்சியின் வீடியோ வைரல் ஆகி வருகிறது.

சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்களை பொறுத்தவரை இதை ஒரு போட்டியாக பார்க்காமல் ஒரு எமோஷனல் நிகழ்வாகத்தான் பார்த்து வருகின்றனர். அந்த இளம்பெண் மட்டுமின்றி பெரும்பாலான ரசிகர்கள் சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றி பெற்றதும் ஆனந்த கூத்தாடி வெற்றியை கொண்டாடிய வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

More News

தீபக் சஹாருக்கு கையெழுத்து போட மறுத்த தோனி.. என்ன காரணமாக இருக்கும்?

நேற்று நடைபெற்ற ஐபிஎல் இறுதி போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அபார வெற்றி பெற்றதை அடுத்து வெற்றிக்கு காரணமான ஜடேஜாவுக்கும் அணியின் கேப்டன் தல தோனிக்கும் வாழ்த்துக்கள் குவிந்து

ஒரே விளையாட்டு.. ஒரு அணி.. ஒரு மனிதன்.. தோனிக்கு திரையுலக பிரபலங்கள் வாழ்த்து..!

தல தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஐபிஎல் கோப்பையை ஐந்தாவது முறையாக கைப்பற்றிய நிலையில் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் உள்பட பல அரசியல்வாதிகளும்

அடுத்த வருடம் விளையாடுவாரா தோனி?

நேற்று நடைபெற்ற ஐபிஎல் இறுதிப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அபார வெற்றி பெற்று ஐந்தாவது முறையாக கோப்பையை கைப்பற்றி உள்ளது. இதனை அடுத்து கோப்பையைப் பெற்றுக்

தோனியின் கண்களில் ஆனந்தக்கண்ணீர்.. ஜட்டுவை தூக்கி வைத்து கொண்டாட்டம்..!

பொதுவாக தல தோனி ஒரு போட்டியில் வெற்றி பெற்றாலும் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்த கொள்ள மாட்டார், அதே போல் தோல்வி அடைந்தாலும் கூட வருத்தத்தையும் வெளிக்காட்ட மாட்டார்.

வெற்றிக்கு பின் வருங்கால மனைவியை அறிமுகம் செய்த ருத்ராஜ்.. தோனியுடன் புகைப்படம்..!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முக்கிய வீரர்களில் ஒருவரான ருத்ராஜ் கெய்க்வாட் நேற்று ஐபிஎல் கோப்பையை சிஎஸ்கே வென்றவுடன் தல தோனி மற்றும் தனது வருங்கால மனைவியுடன் எடுத்த புகைப்படத்தை