close
Choose your channels

கெளதம் கார்த்திக்கிடம் செல்போனை பறித்தது 17 வயது சிறுவனா?

Thursday, December 17, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழ் திரை உலகின் இளையதலைமுறை நடிகர்களில் ஒருவரான கௌதம் கார்த்திக் இடம் கடந்த 2ஆம் தேதி ஆழ்வார்பேட்டை டிடிகே சாலையில் மர்ம நபர்கள் இருவர் செல்போனை பறித்து சென்றனர். கௌதம் கார்த்திக் சைக்கிளில் பயிற்சி மேற்கொண்டிருந்த போது திடீரென வந்த அந்த மர்ம நபர்கள் கௌதம் கார்த்திக்கிடம் இருந்த செல்போனை பறித்து சென்றதை அடுத்து இது குறித்து கௌதம் கார்த்திக் மயிலாப்பூர் போலீசாரிடம் புகார் கொடுத்தார்

இந்த புகாரின் அடிப்படையில் மயிலாப்பூர் போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில் தற்போது கௌதம் கார்த்திக்கிடம் இருந்து செல்போனை பறித்ததாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதில் ஒருவர் மயிலாப்பூர் குயில் தோட்டத்தை சேர்ந்த 17 வயது சிறுவன் என்பது தெரியவந்துள்ளது. இன்னொருவர் பெரும்பாக்கத்தை சேர்ந்த சரத் என்றும் இருவரும் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் தகவல் வெளிவந்துள்ளது

மேலும் கைது செய்யப்பட்ட இருவரும் கௌதம் கார்த்திக்கிடம் இருந்து செல்போனை பறித்து ராயப்பேட்டை பகுதியில் உள்ள பைரூஸ்கான் என்பவரிடம் அந்த செல்போனை விற்பனை செய்ததாக விசாரணையில் தெரிய வந்ததை அடுத்து பைரூஸ்கானையும் போலீசார் கைது செய்துள்ளனர்

கௌதம் கார்த்திக்கிடம் இருந்து செல்போனை பறித்து சென்றவர்களில் ஒருவர் 17 வயது சிறுவன் என்ற தகவல் தற்போது பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.