close
Choose your channels

பிக்பாஸ் போட்டியாளர்கள் இருவருக்கு கொரோனா: திட்டமிட்டப்படி ஆரம்பமாகுமா?

Sunday, September 20, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி இன்னும் ஒரு சில நாட்களில் விஜய் டிவியில் ஒளிபரப்பாக உள்ளது. இந்த நிகழ்ச்சியில் நடிகை லட்சுமி மேனன், நடிகர் ரியோராஜ், நடிகர்கள் அனுமோகன், ஆதித்யா பாஸ்கர், அபிஹாசன், நடிகை ரம்யா பாண்டியன், நடிகை சஞ்சனா ஷெட்டி உள்ளிட்ட பலர் கலந்துக் கொள்ள இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது

இந்த நிலையில் இந்த நிகழ்ச்சி அக்டோபர் 10ஆம் தேதி தொடங்க பிக்பாஸ் குழுவினர் திட்டமிட்டிருந்த நிலையில் திடீரென இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இருக்கும் போட்டியாளர்கள் இருவருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளது

இந்த தகவலால் பிக்பாஸ் நிகழ்ச்சி ஒத்திவைக்கப்படுமா? அல்லது கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பதிலாக மாற்று போட்டியாளர்கள் கலந்து கொள்வார்களா? என்பது குறித்த தகவல் இன்னும் வெளிவரவில்லை. இருப்பினும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்காக தயாராகிக் கொண்டிருந்த இருவருக்கு திடீரென கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருப்பதால் பிக்பாஸ் நிர்வாகம் அதிர்ச்சியில் உள்ளது என்பது மட்டும் உறுதி

இந்த நிலையில் பிக்பாஸ் வீட்டில் கடந்த 3 சீசன்களை போல் இந்த சீசனில் டபுள்பெட் கிடையாது என்றும் சிங்கிள் பெட்கள் மட்டுமே பயன்படுத்தப்படுவதாகவும் தனிமனித இடைவெளி உள்ளிட்ட பல பாதுகாப்பு அம்சங்களும் இந்த முறை கடைபிடிக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.