close
Choose your channels

அரவக்குறிச்சியில் கமல்ஹாசன் மீது எப்.ஐ.ஆர் பதிவு: கைது செய்யப்படுவாரா?

Tuesday, May 14, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இந்து தீவிரவாதம் குறித்து கமல் பேசிய பேச்சு நேற்று முதல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் அரவக்குறிச்சியில் இன்று கமல் மீது எப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது.

கரூர் மாவட்ட இந்து முன்னணி மாவட்ட செயலாளர் ராமகிருஷ்ணன் என்பவர் அளித்துள்ள புகாரின் அடிப்படையில் கலவரத்தை தூண்டும் வகையில் பேசியது, பொது இடத்தில் பிரச்சினையை உருவாக்கியது என கமல் மீது 153A, 295A என இரு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும் ராமகிருஷ்ணன் அளித்துள்ள இந்த புகாரில், ''கமல்ஹாசன் முஸ்லீம்கள் அதிகம் வாழும் பகுதியில் அவர்களுடைய ஓட்டுக்களை பெறுவதற்காக இந்து மக்களின் மனம் புண்படும்படி பேசியுள்ளதாகவும், அவரது பேச்சால் இந்தியாவில் உள்ள இந்துக்கள் அனைவரின் மனம் வேதனை அடைந்துள்ளதாகவும், இந்துக்களுக்கும் முஸ்லீம்களுக்கும் பகை உணர்வை ஏற்படுத்தவே இவ்வாறு அவர் பேசியுள்ளதாகவும், எனவே கமல்ஹாசன் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இந்த புகாரின் அடிப்படையில் கமல்ஹாசன் கைது செய்யப்படுவாரா? என்ற கேள்வியும் எழுந்துள்ளதால் மக்கள் நீதி மய்யம் கட்சி தொண்டர்களிடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.