கடுமையான டாஸ்க்கில் இருந்து விலகிய இருவர்.. நம்பிக்கையை இழக்காத மற்ற போட்டியாளர்கள்..!


Send us your feedback to audioarticles@vaarta.com


பிக் பாஸ் வீட்டில் தற்போது டிக்கெட் டு பினாலே டாஸ்க் நடைபெற்று வரும் நிலையில் இந்த கடுமையான டாஸ்க்கில் எட்டு போட்டியாளர்கள் விளையாடி வருகின்றனர். இரண்டு வகையான போர்டுகள் வைக்கப்பட்டுள்ள நிலையில் அதில் கை வைத்துக் கொண்டே மணி கணக்கில் நிற்க வேண்டும் என்பதுதான் டாஸ்க். போர்டில் இருந்து கையை எடுத்து விட்டால் டாஸ்க்கிலிருந்து விலக்கப்படுவார்கள்
இந்த நிலையில் ஒரு மணி நேரம் கழிந்ததாக பிக் பாஸ் அறிவித்த நிலையில் ’நரம்பெல்லாம் மரத்துப் போய்விட்டது என்று பூர்ணிமா கூறுகிறார். அப்போது தினேஷ் ’விஷ்ணு நீயும் நானும் தான் கடைசிவரை இருக்க வேண்டும் என்று கூறுகிறார்.
அப்போது இந்த போட்டியில் இருந்து வெளியேற்றப்படும் முதல் நபர் நிக்சன் என்று பிக் பாஸ் அறிவிக்கிறார். இதனை அடுத்து சில மணி நேரம் கழித்து விசித்ராவும் வெளியேற்றப்படுகிறார்.
இதனை அடுத்து தினேஷ், விஷ்ணு, மணி, ரவீனா ஆகிய நான்கு பேரும் ஒரு பக்கம் நிலையாக நின்று கொண்டிருக்கும் நிலையில் இன்னொரு பக்கம் மாயா, பூர்ணிமா மட்டும் நிற்கின்றனர். இவர்களில் யாருக்கு ஐந்து புள்ளிகள் கிடைக்கும்? யார் நேரடியாக இறுதிப் போட்டிக்கு செல்வார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments