சென்னையில் கொரோனா பாதிக்கப்பட்ட இருவர் தப்பிவிட்டதால் பரபரப்பு

தமிழகத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. நேற்றுவரை 309 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு இருந்த நிலையில் இன்று ஒரே நாளில் 102 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இதனை அடுத்து தமிழகத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 411 ஆக உயர்ந்திருப்பதாகவும் சுகாதாரத் துறை உறுதி செய்துள்ளது

இந்த நிலையில் சென்னை ராயப்பேட்டை மருத்துவமனையில் கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு இருவர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் திடீரென இருவரும் தப்பி ஓடிவிட்டனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

இதுகுறித்து ராயப்பேட்டை மருத்துவமனை மருத்துவர்கள் காவல்துறையிடம் புகார் அளித்துள்ளனர். கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட நபர்கள் தப்பி உள்ளதால் அவர்கள் மூலம் மேலும் பலருக்கு கொரோனா வைரஸ் பரவும் வாய்ப்பு இருப்பதால் அந்த இருவரையும் கண்டுபிடிக்கும் பணியில் காவல்துறையினர் தீவிரமாக உள்ளனர்