close
Choose your channels

ஒரே வாரத்தில் இரண்டு புயல்கள்: தாங்குமா சென்னை?

Wednesday, October 4, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருவதால் பொதுமக்களை அச்சுறுத்தி வந்த குடிதண்ணீர் பிரச்சனை ஒருவழியாக தீர்ந்தது.

இந்த நிலையில் இந்த வார இறுதியில் வடகிழக்கு பருவமழை தொடங்கவுள்ளதால் வங்கக்கடலில் ஒரே வாரத்தில் இரண்டு புயல்கள் உருவாக வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது.

முதல் புயல் இம்மாதம் 11ஆம் தேதியும் 2வது புயல் இம்மாதம் 15 முதல் 20 ஆம் தேதிக்குள்ளும் அதாவது கிட்டத்தட்ட ஒரே வாரத்தில் இரண்டு புயல்கள் கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது,. 

இரண்டு புயல்களுமே கடலூர் மற்றும் நெல்லூர் இடையே கரையை கடக்கும் என்று எதிர்பார்ப்பதால் சென்னையில் பலத்த காற்றுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புயல்கள் சென்னைக்கு அதிக பாதிப்புகளை தரும் என்று எதிர்பார்க்கப்படுவதால் அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் ஈடுபட வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.