close
Choose your channels

தேர்வில் தோல்வி அடைந்ததால் கொள்ளையர்களாக மாறிய இன்ஜினியரிங் கல்லூரி மாணவர்கள்: அதிர்ச்சி தகவல் 

Sunday, August 23, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தேர்வில் தோல்வி அடைந்ததால் மனம் வெறுத்து கொள்ளையர்களாக மாறிய இரண்டு இன்ஜினியரிங் கல்லூரி மாணவர்கள் குறித்த தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலத்திலுள்ள காசியாபாத் என்ற நகரில் ஒரு இன்டர்நெட் மையத்தில் இரண்டு மர்ம நபர்கள் திடீரென புகுந்து துப்பாக்கி முனையில் கொள்ளை அடித்தனர். அவர்கள் கொள்ளையடித்த பணம் ரூபாய் 1.25 லட்சம் என்று கூறப்படுகிறது.

இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் அங்கிருந்த சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் கொள்ளையர்கள் இருவரையும் கண்டுபிடித்தனர். அப்போதுதான் அவர்கள் இருவரும் என்ஜினியரிங் கல்லூரி மாணவர்கள் என்பதும் சமீபத்தில் நடைபெற்ற தேர்வில் அவர்கள் தோல்வி அடைந்ததால் மனம் வெறுத்து கொள்ளையர்களாக மாறி விட்டதும் தெரியவந்தது.

இதனையடுத்து அவர்களை கைது செய்த போலீசார் அவர்களிடம் தீவிர விசாரணை செய்து வருகின்றனர். கல்லூரித் தேர்வில் தோல்வி அடைந்ததால் மனம் வெறுத்து கொள்ளையர்களாக மாறிய எஞ்சினியரிங் கல்லூரி மாணவர்களால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.