'கே.ஜி.எஃப் 2' படத்தை இணைந்து பார்த்த இரு திரையுலக ஜாம்பவான்கள்!

ஏப்ரல் 14ஆம் தேதி வெளியான ‘கே.ஜி.எஃப் 2’ படம் பெரிய வெற்றி பெற்றுள்ள நிலையில் இந்த படத்தை தமிழ் திரை உலகில் இரண்டு ஜாம்பவான்கள் பார்த்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன .

கன்னட நடிகர் யாஷ் நடிப்பில், பிரசாந்த் நீல் இயக்கத்தில் உருவான ’கேஜிஎப் 2’ திரைப்படம் ஏப்ரல் 14ஆம் தேதி வெளியானது. தமிழ் உள்பட 5 மொழிகளில் வெளியான இந்தப் படம் உலகம் முழுவதும் 900 கோடி வரை வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

மிகப்பெரிய வெற்றி பெற்ற இந்த திரைப்படத்தை ஏற்கனவே பல திரையுலகினர் பார்த்து பாராட்டிய நிலையில் தமிழ் திரையுலகின் ஜாம்பவான்களான உலக நாயகன் கமல்ஹாசன் மற்றும் இசைஞானி இளையராஜா ஆகிய இருவரும் இணைந்து பார்த்துள்ளனர். இருவரையும் படக்குழுவினர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது .

‘கே.ஜி.எஃப் 2’ படத்தை கமல்ஹாசன் மற்றும் இளையராஜா இணைந்து பார்த்த புகைப்படம் தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது.

More News

அஜித்தின் 63வது படத்தை இயக்குவது இவரா? மீண்டும் ஒரு சூப்பர்ஹிட்டா?

'அஜித் 61' படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் எச் வினோத் இயக்கத்தில், போனி கபூர் தயாரிப்பில் உருவாகி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில்

கமல், விஜயகாந்த், விஜய் பட வில்லன் நடிகர் காலமானார்: திரையுலகினர் இரங்கல்

பிரபல வில்லன் மற்றும் குணசித்திர நடிகர் சலீம் கௌஸ் சற்றுமுன் காலமானதாக அறிவிக்கப்பட்டுள்ளதை அடுத்து திரையுலகினர் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

வாங்கிய கடனுக்கு வட்டி மட்டும் 50 கோடி ரூபாய் கட்டிய சூப்பர்ஸ்டார் நடிகர்!

50 கோடி ரூபாய் வட்டி மட்டும் கட்டி உள்ளதாக சூப்பர் ஸ்டார் நடிகர் தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது .

வெற்றிமாறன் - ராகவா லாரன்ஸ் படத்தின் படப்பிடிப்பு எப்போது? சூப்பர் அப்டேட்

வெற்றிமாறன் மற்றும் ராகவா லாரன்ஸ் இணையும் படம் குறித்த தகவலை கடந்த சில நாட்களுக்கு முன் பார்த்தோம்.  இந்த நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு குறித்து சூப்பர் அப்டேட் தற்போது வெளியாகியுள்ளது.

தமிழ் படத்தின் டிஜிட்டல் உரிமையை ரூ.125 கொடுத்து வாங்கியதா அமேசான்?

தமிழில் பிரமாண்டமாக தயாராகி வரும் திரைப்படம் ஒன்றின் டிஜிட்டல் உரிமையை மட்டும் 125 கோடி ரூபாய் கொடுத்து அமேசான் நிறுவனம் வாங்கி இருப்பதாக கூறப்படுவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது