close
Choose your channels

அசோக்செல்வனின் அடுத்த படத்திலும் இரண்டு ஹீரோயின்கள்

Friday, March 20, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

அசோக் செல்வன் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த ’ஓ மை கடவுளே’ என்ற திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றதோடு வசூலிலும் சக்கை போடு போட்டது என்பது தெரிந்ததே. இந்த படத்தில் ரித்திகா சிங் மற்றும் வாணிபோஜன் ஆகிய இரண்டு நாயகிகள் நடித்து இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ’ஓ மை கடவுளே’ படத்தை அடுத்து தற்போது அவர் 'ஃபேட் செஃப்’ என்ற படத்தில் நடிக்கவுள்ளார். தமிழ், தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளில் உருவகவிருக்கும் இந்த படத்திலும் இரண்டு நாயகிகள் நடிக்க உள்ளனர். நித்யா மேனன் மற்றும் ரீத்துவர்மா ஆகிய இருவரும்தான் இந்த படத்தில் நாயகியாக நடிக்கவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ரஜினிகாந்த் நடித்த ’காளி’, கமல்ஹாசன் நடித்த ‘குரு’, ரஜினி, கமல் இணைந்து நடித்த ‘அலாவுதீனும் அற்புத விளக்கும்’ போன்ற படங்களை இயக்கிய பழம்பெரும் இயக்குநர் ஐவி சசியின் மகன் அனி சசி இயக்கும் இந்த படத்திற்கு திவாகர் மணி ஒளிப்பதிவாளராக பணிபுரியவுள்ளார். இந்த படத்திற்காக தனது உடல் எடையை அசோக் செல்வன் குறைந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு கொரோனா பிரச்சினை முடிந்த பிறகு தொடங்கும் என தெரிகிறது.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.