close
Choose your channels

இன்றைய ஐபிஎல் போட்டி ஒத்திவைப்பா? வெளியான தகவல்!

Monday, May 3, 2021 • தமிழ் Sport News Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கொல்கத்தா அணியின் வீரர்கள் வருண் சக்ரவர்த்தி மற்றும் சந்தீப் சர்மா ஆகியோருக்கு கொரோனா உறுதிசெய்யப்பட்டு உள்ளதாகவும் அதையொட்டி இன்றைய ஐபிஎல் போட்டி ஒத்தி வைக்கப்படுவதற்கு வாய்ப்பு உள்ளதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது.

ஐபிஎல் 14 ஆவது சீசனில் 30 ஆம் வது லீக் போட்டி இன்று அகமதாபாத் மையதானத்தில் நடைபெற இருந்தது. இதில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிக்கு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கும் இடையிலான போட்டி நடைபெற இருந்தது. ஏற்கனவே புள்ளி அட்டவணையில் 3 ஆவது இடத்தில் இருக்கும் பெங்களூரு அணி இந்த போட்டியில் வெற்றிப் பெற்று இருந்தால் புள்ளிப் பட்டியலில் 2 ஆவது இடத்தைப் பிடித்து இருக்கும்

அதேபோல புள்ளிப் பட்டியலில் 7 ஆவது இடத்தில் இருக்கும் கொல்கத்தா அணி இந்தப் போட்டியில் வெற்றிப் பெற்று இருந்தால் 5 ஆவது இடத்திற்கு முன்னேறி இருக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் கொல்கத்தா அணியின் வருண் சக்கரவர்த்தி மற்றும் சந்தீப் சர்மா ஆகிய இருவருக்கும் கொரோனா பாதிப்பு உறுதிச் செய்யப்பட்டு உள்ளதாகவும் இதனால் இன்று 7.30 மணி அளவில் நடைபெற இருந்த இன்றைய போட்டி ஒத்தி வைக்கப்படலாம் என்றும் எதிர்ப்பார்க்கப்படுகிறது.

பிசிசிஐ இதுகுறித்து அதிகாரப்பூர்வமான தகவல் வெளியிடாத நிலையில் போட்டி ஒத்தி வைக்கப்படுவதற்கான வாய்ப்பு இருப்பதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.