இரட்டை இலை சின்னத்தை பெற ரூ.60 கோடி பேரமா? டிடிவி தினகரன் மீது வழக்குப்பதிவு

  • IndiaGlitz, [Monday,April 17 2017]

மறைந்த முதல்வர் ஜெயலலிதா மறைவிற்கு பின்னர் அதிமுக, சசிகலா அணி, ஓபிஎஸ் அணி என இரண்டாக பிளந்தது. இதன் காரணமாக அதிமுகவின் கட்சி மற்றும் இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டது.

இந்த நிலையில் இரண்டு அணியினர்களும் இரட்டை இலை சின்னத்தை பெற முயற்சித்து வரும் நிலையில் இரட்டை இலை சின்னதை பெற்று தர தினகரனிடம் லஞ்சம் வாங்கியதாக டெல்லியில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் போலீஸார் நடத்திய விசாரணையில் அவர் டிடிவி தினகரனிடம் இருந்து இரட்டை இலை சின்னத்தை பெற்றுத்தர லஞ்சம் பெற்றதாக வாக்குமூலம் அளித்துள்ளதாக கூறப்படுகிறது.

இன்று காலை தலைநகர் டெல்லியில் சுகேஷ் சந்திரா என்பவர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் இருந்து சுமார் ரூ.1.30 கோடியை டெல்லி போலீசார் பறிமுதல் செய்துள்ளதாகவும், இரட்டை இலை சின்னத்திற்காக சுமார் ரூ.60 கோடி வரை பேரம் பேசப்பட்டதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.

கைது செய்யப்பட்ட சுகேஷ் சந்திராவிடம் டெல்லி குற்றப்பிரிவு போலீசார் நடத்திய தீவிர விசாரணையில் அவர் இரட்டை இலை சின்னத்தை பெற்றுத் தர, சசிகலா அணியிடம் இருந்து அதாவது டிடிவி தினகரனிடம் இருந்து லஞ்சம் பெற்றதாக அவர் வாக்குமூலம் அளித்துள்ளதாக தெரிகிறது.

இந்த விசாரணையின் அடிப்படையில், இரட்டை இலை சின்னத்தை பெற்றுத் தர லஞ்சம் கொடுத்ததாக, டிடிவி தினகரன் மீது டெல்லி குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

More News

ஃபாஸ்ட் அண்ட் ஃபியூரியஸ் படத்தின் ஃபாஸ்ட் வசூல் நிலவரம்

கடந்த சில வருடங்களாக வெளிவந்து கொண்டிருந்த ஃ'பாஸ்ட் அண்ட் ஃபியூரியஸ் படத்தின் ஏழு பாகங்களும் இந்தியா உள்பட உலகம் முழுவதும் நல்ல வசூலை வாரி குவித்த நிலையில் கடந்த 12ஆம் தேதி இந்த படத்தின் எட்டாம் பாகம் வெளியானது...

'கடம்பன்' ஆர்யாவுக்கு கிடைத்த ஆறுதலான வசூல் செய்தி

நடிகர் ஆர்யா நடித்த படங்களின் வசூல் கடந்த சில ஆண்டுகளாகவே திருப்திகரமாக இல்லாத நிலையில் அவர் மிகவும் ரிஸ்க் எடுத்து, உடலை வருத்தி நடித்த படம் 'கடம்பன்'...

சிவலிங்கா'வின் சென்னை ஓப்பனிங் வசூல் நிலவரம்

ராகவா லாரன்ஸ் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த 'மொட்டசிவா கெட்டசிவா' சுமாரான வசூலையே தந்த நிலையில் கடந்த வெள்ளியன்று அவர் நடித்த மற்றொரு படமான 'சிவலிங்கா' ரிலீஸ் ஆனது பி.வாசு இயக்கத்தில் ராகவா லாரன்ஸ், ரித்திகா சிங் நடிப்பில் வெளிவந்த இந்த படம் ஊடகங்களின் பாசிட்டிவ் ரிசல்ட் காரணமாக அபாரமான ஓப்பனிங் வசூலை பெற்றுள்ளது...

தனுஷின் 'ப.பாண்டி'யின் ஃபவர்புல் சென்னை வசூல்

திரையுலகில் தனுஷ் கால் பதிக்காத துறையே இல்லை என்ற அளவுக்கு அவர் நடிகர், பாடகர், பாடலாசிரியர், தயாரிப்பாளர் போன்ற துறைகளில் வெற்றி பெற்று தற்போது இயக்குனர் துறையிலும் அவர் பாஸ் ஆகிவிட்டார்...

சீயான் விக்ரமுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்

கோலிவுட் திரையுலகில் கமல்ஹாசனுக்கு அடுத்து ஒரு கேரக்டருக்காக அதிகமாக மெனக்கெடுவது சீயான் விக்ரம்தான் என்பதை அனைவரும் ஒப்புக்கொள்வர். ஷங்கரின் 'ஐ' உள்பட பல படங்களின் கேரக்டராகவே அவர் மாறிவிடும் அவரது அர்ப்பணிப்பான உழைப்பே இன்று அவரை உச்சத்தில் நிறுத்தியுள்ளது...