close
Choose your channels

டெல்லியில் இருந்து தமிழகம் திரும்பிய மேலும் இருவருக்கு கொரோனா!

Thursday, April 2, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழகத்தில் ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் தகவல் தெரிவித்துள்ளார். ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியை சேர்ந்த இருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாகவும், கொரோனா தொற்று உறுதியாகியுள்ள 2 பேரும் டெல்லி மாநாட்டில் கலந்து கொண்டவர்கள் என்றும் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே டெல்லி மாநாட்டில் கலந்து கொண்டு திரும்பியவர்களில் நேற்று முன் தினம் 45 பேர்களுக்கும், நேற்று 110 பேர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட இன்று மேலும் இருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

இதனையடுத்து தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 236ஆக உயர்ந்துள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.