close
Choose your channels

டெல்லி மாநாட்டில் இருந்து திரும்பிய மேலும் இருவருக்கு கொரோனா!

Wednesday, April 1, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

டெல்லியில் கடந்த மார்ச் 13 முதல் 15 வரை நடைபெற்ற மத மாநாட்டில் தமிழகம் உள்பட பல மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்ட நிலையில் இந்த மாநாட்டில் கலந்து கொண்டு தமிழகம் திரும்பிய 45 பேர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது என்ற செய்தியை ஏற்கனவே பார்த்தோம்

இந்த நிலையில் நமது அண்டை மாநிலமான புதுவையில் இருந்து டெல்லி மாநாட்டில் கலந்து கொண்டு திரும்பிய இருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து புதுவையில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 3ஆக உயர்ந்துள்ளது. சமீபத்தில் கொரோனா தொற்று ஏற்பட்டு குணமடைந்த பெண் வீடு திரும்பிய நிலையில், புதிதாக 2 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருப்பது புதுவை மக்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

இதனையடுத்து டெல்லி சென்று திரும்பிய கொரோனா பாதிக்கப்பட்டவர்கள்புதுச்சேரி அரியாங்குப்பம் பகுதியை சேர்ந்தவர்கள் என்பதால் அந்த பகுதி முழுவதும் போலீசார் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.