ஒரே நாளில் 2 பட பூஜை போட்ட தயாரிப்பாளர்.. ஒன்று 2ஆம் பாகம்.. இன்னொன்று 4ஆம் பாகம்..!

  • IndiaGlitz, [Saturday,April 06 2024]

பிரபல தயாரிப்பாளர் நேற்று ஒரே நாளில் இரண்டு படங்களையும் பூஜையை போட்டுள்ள நிலையில் அதில் ஒரு படம் அவர் தயாரித்த படத்தின் 2ஆம் பாகம் என்றும் இன்னொரு படம் அவர் தயாரித்த படத்தின் 4ஆம் பாகம் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

பிரபல தயாரிப்பாளர் சிவி குமார் ’இன்று நேற்று நாளை 2’ மற்றும் ’பீட்சா 4’ ஆகிய இரண்டு திரைப்படங்களின் பூஜையை நேற்று சென்னையில் நடத்தியுள்ள நிலையில் இந்த பூஜை குறித்த புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.

கடந்த 2012 ஆம் ஆண்டு கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவான ’பீட்சா’ என்ற திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது என்பதும் விஜய் சேதுபதி நடித்த இந்த படம் மிகப்பெரிய வசூலையும் வாரி குவித்தது என்பது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து தீபன் சக்கரவர்த்தி இயக்கத்தில் ’பீட்சா 2 வில்லா’ மற்றும் மோகன் கோவிந்த் இயக்கத்தில் 'பீட்சா 3 தி மம்மி’ ஆகிய படங்களும் அடுத்தடுத்து வெளியானது.

முதல் பாகம் அளவுக்கு இரண்டாம் மற்றும் மூன்றாம் பாகம் வெற்றி பெறவில்லை என்றாலும் தற்போது இந்த படத்தின் நான்காம் பாகத்தின் பூஜை போடப்பட்டுள்ளது. இந்த படத்தின் நாயகனாக நாசர் மகன் அபிஹாசன் நடிக்கவுள்ளார். மேலும் மற்ற விவரங்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதேபோல் 2015 ஆம் ஆண்டு வெளியான ’இன்று நேற்று நாளை’ படத்தின் இரண்டாம் பாகத்தின் பூஜையையும் தயாரிப்பாளர் சி வி குமார் நேற்று போட்டுள்ளார். இந்த படத்தின் முதல் பாகத்தை ரவிக்குமார் இயக்கிய நிலையில் விஷ்ணு விஷால் மற்றும் மியா ஜார்ஜ் நடித்திருந்தனர். இந்த படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது 9 ஆண்டுகள் கழித்து இந்த படத்தின் இரண்டாம் பாகத்தின் பூஜை போடப்பட்டுள்ளது.

இந்த படத்தின் பூஜையில் இயக்குனர் ரவிகுமார் கலந்து கொண்டாலும் அவர் சூர்யாவை வைத்து படத்தை இயக்க இருப்பதால் இந்த படத்தை அவர் இயக்கமாட்டார் என்று தெரிகிறது. மேலும் இந்த படத்தில் முதல் பாகத்தில் விஷ்ணு விஷால் நடித்த நிலையில் இரண்டாம் பாகத்தில் வேறொரு ஹீரோ நடிக்கவிருப்பதாகவும் கூறப்படுகிறது.

More News

இத்தனை சர்ச்சைகளுக்கு பிறகும் டாக்டர் தமிழிசை சௌந்தர்ராஜன் அவர்களின் அரசியல் பயணம்.

மருத்துவத் துறையில் சிறந்து விளங்கினாலும் அரசியல் மற்றும் பேச்சு இதுவே தமிழிசைக்கு இரு கண்களாக இருந்தது....

ஆன்மீக பேச்சாளர் விஜயகுமார்: ஒடுக்கத்தூர் மகான் மற்றும் வேல் மாறல் பற்றிய ஆழமான உரைகள்

ஆன்மீகக்ளிட்ஸ் யூடியூப் சேனலில், பிரபல ஆன்மீக பேச்சாளர் விஜயகுமார், ஒடுக்கத்தூர் மகான் மற்றும் வேல் மாறல் பற்றிய ஆழமான உரைகளை வழங்கியுள்ளார்.

பிரபுவுக்கு ஜோடியாக சினிமாவில் நடித்த 'சிறகடிக்க ஆசை' விஜயா.. ஆனாலும் ஒரு துரதிர்ஷ்டம்..!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் 'சிறகடிக்க ஆசை' சீரியல் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் நிலையில் இந்த சீரியலில் விஜயா என்ற கேரக்டரில் அனிலா நடித்து வருகிறார்

ஏப்ரல் 11ஆம் தேதி வெளியாகும் 'வல்லவன் வகுத்ததடா': பத்திரிக்கையாளர் சந்திப்பு  !!

ஃபோக்கஸ் ஸ்டுடியோ சார்பில் விநாயக் துரை தயாரித்து, இயக்க, ஹைப்பர்லிங்க் திரைக்கதையில், க்ரைம் டிராமா படமாக உருவாகியிருக்கும் திரைப்படம் “வல்லவன் வகுத்ததடா”

ஃபர்ஸ்ட் நைட்ல பொண்ணு ஏன் தூங்கக்கூடாது: ஜிவி பிரகாஷின் 'டியர்' டீசர்..!

ஜிவி பிரகாஷ் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் முக்கிய வேடங்களில் நடித்த 'டியர்' என்ற திரைப்படம் வரும் 11ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் டிரைலர் சற்றுமுன் வெளியாகி இணையத்தில்