close
Choose your channels

நடுவானில் மோதிக்கொண்ட இரு விமானங்கள்… 7 பேர் உயிரிழப்பு மற்றும் பரபரப்பு சம்பவம்!!!

Saturday, August 1, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடுவானில் மோதிக்கொண்ட இரு விமானங்கள்… 7 பேர் உயிரிழப்பு மற்றும் பரபரப்பு சம்பவம்!!!

 

அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணம் அருகே இரு விமானங்கள் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் அம்மாகாண உறுப்பினர் உட்பட 7 பேர் உயிரிழந்தனர். இதனால் அலாஸ்கா பகுதியில் கடும் பரபரப்பு ஏற்பட்டு இருக்கிறது. விபத்துக்குள்ளான விமானங்கள் சிறிய வகை விமானங்கள் என்றும் செய்திகள் தெரிவித்து உள்ளனர். சால்டோட்டனா பகுதியில் சென்ற போது இந்த விபத்து நடந்ததாகவும் கூறப்படுகிறது.

இந்த விபத்தில் அலாஸ்கா மாகாண உறுப்பினர் கேரி நோயும் உயிரிழந்து இருப்பது தற்போது உறுதிசெய்யப்பட்டு இருக்கிறது. விபத்து குறித்த முதல்கட்ட விசாரணையில் விளையாட்டாக கேரி நோய் இந்த விமானத்தை இயக்கியதாகவும் கூறப்படுகிறது. 4 சுற்றுலாபயணிகள், 1 விமானி, 1 ஊழியர், அலாஸ்கா மாகாண உறுப்பினர் கேரி நோய் உட்பட 7 பேர் உயிரிழந்த விவகாரம் தற்போது அப்பகுதியில் கடும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.