close
Choose your channels

ஆண் நண்பருடன் டிக்டாக்கில் இளம்பெண்: அடித்தே கொலை செய்த கணவன்

Saturday, December 14, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

டிக்டாக் செயலி உலகெங்கிலுமுள்ள வாலிபர்களையும் இளம் பெண்களை அடிமைப்படுத்தி வைத்துள்ள நிலையில் இந்த டிக்டாக்கால் ஒரு சில நன்மைகள் இருந்தாலும் பல விபரீதங்கள் ஏற்பட்டு வருகிறது என்பதும் அந்த விபரீதங்கள் கொலையில் கூட முடிந்த சம்பவங்களும் நிகழ்ந்துள்ளன என்பதையும் அவ்வப்போது பார்த்து வருகிறோம்

இந்த நிலையில் சத்தீஸ்கர் மாநிலத்தில் ஆண் நண்பர் ஒருவருடன் டிக் டாக் செய்த இளம் பெண்ணை அவரது கணவர் அடித்தே கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள ராய்ப்பூர் என்ற பகுதியில் மஞ்சு என்ற இளம்பெண் சமீபத்தில் சயிப் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதை அடுத்து அவர் தனது சகோதரி மனிஷா என்பவருடன் ஹாஸ்டலில் தங்கி இருந்தார்.

இந்த நிலையில் மஞ்சுவுக்கு டிக் டாக் வீடியோ மேல் கவனம் விழுந்தது. அவருக்கு டிக் டாக் மூலம் பல ஆண் நண்பர்கள் நட்பாகினர். அவர்களில் ஒரு ஆண் நண்பருடன் இணைந்து ஒரு டிக் டாக் வீடியோ ஒன்றை பதிவு செய்தார்.

இந்த டிக் டாக் வீடியோவை பார்த்து மஞ்சுவின் கணவர் சயிப், கடும் ஆத்திரம் அடைந்து இதுகுறித்து அவரிடம் விசாரிக்க மனுஷா -மஞ்சு தங்கியிருந்த ஹாஸ்டலுக்கு சென்றார். அங்கு மஞ்சு-சயிப் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றி சயிப் அங்கிருந்த தோசைக்கல்லை எடுத்து மஞ்சுவின் தலையில் அடித்தே கொலைசெய்தார். இதை தடுக்க வந்த அவரது சகோதரி மனிஷாவையும் அடித்துக் கொன்றார்

இந்த கொலைக்கு சயிப் நண்பர் முஸ்தபா என்பவர் உடந்தையாக இருந்ததாக தெரிகிறது. இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சிசிடிவி கேமரா மூலம் கொலையாளிகளை கண்டுபிடித்து அவர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர். டிக்டாக் வீடியோவால் இரண்டு இளம்பெண்கள் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.