'தக்லைஃப்' படத்தில் இணைந்த 2 பிரபலங்கள்.. அதில் ஒருவர் 'நாயகன்' நடிகர்..!

  • IndiaGlitz, [Saturday,January 06 2024]

உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில், பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாக இருக்கும் திரைப்படம் ’தக்லைஃப்’. இந்த படத்தின் அறிவிப்பு சமீபத்தில் வெளியான நிலையில் இம்மாத இறுதியில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஏற்கனவே ’இந்தியன் 2 ’ படத்தின் படப்பிடிப்பை கமல்ஹாசன் முடித்துவிட்ட நிலையில் இன்னும் ஒரு சில நாட்களில் ’கல்கி 2898’ என்ற படத்தின் படப்பிடிப்பையும் முடித்து விடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனை அடுத்து அவர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாக இருக்கும் ’தக்லைஃப்’ படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்ள உள்ளார்.

இந்த நிலையில் ஏற்கனவே இந்த படத்தில் த்ரிஷா, ஜெயம் ரவி, துல்கர் சல்மான், கவுதம் கார்த்திக் உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடிக்கவிருப்பதாக தகவல் வெளியான நிலையில் தற்போது மேலும் இரண்டு பிரபலங்கள் இந்த படத்தில் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அவர்களில் ஒருவர் நாசர் என்றும் கூறப்படுகிறது.

’தக்லைஃப்’ திரைப்படம் ஏற்கனவே ’நாயகன்’ படத்துடன் கனெக்சன் இருப்பதாக கூறப்படும் நிலையில் ’நாயகன்’ படத்தில் கமல்ஹாசன் மருமகனாக நடித்த நாசர் இந்த படத்தில் இணைந்துள்ளது அதனை மேலும் வலுப்படுத்தி உள்ளது

இதனை அடுத்து இந்த படத்தில் நடிக்கும் இன்னொரு பிரபலம் நடிகை அபிராமி. இவர் ஏற்கனவே கமல்ஹாசன் ஜோடியாக ’விருமாண்டி’ திரைப்படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இசைப்புயல் ஏ ஆர் ரகுமான் இசையமைக்கும் இந்த படத்திற்கு ரவி கே சந்திரன் ஒளிப்பதிவும், ஸ்ரீதர் பிரசாத் படத்தொகுப்பு பணியும் செய்ய உள்ளனர். மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனங்கள் இணைந்து இந்த படத்தை தயாரிக்க உள்ளது.

More News

துரத்தி துரத்தி அடிப்பேன்.. கமல்ஹாசன் முன் போட்டியாளரை மிரட்டிய பூர்ணிமா!

டைட்டில் பட்டம் இல்லாமல் சும்மா வீட்டுக்கு வந்தால் துரத்தி துரத்தி அடிப்பேன் என சக போட்டியாளரை பூர்ணிமா, கமல்ஹாசன் முன்னிலையில் கூறிய வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் எதிர்பாராத எலிமினேஷன்.. இந்த வாரமும் மாயா தப்பித்துவிட்டாரா?

 பிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் அனைத்து போட்டியாளர்களும் நாமினேஷன் செய்யப்பட்டிருந்த நிலையில் பூர்ணிமா மட்டும் புத்திசாலித்தனமாக 16 லட்சம் ரூபாய் பணப்பெட்டியை எடுத்து விட்டு வெளியேறி விட்டார்

'அயலான்' ரிலீசுக்கு பின் ரசிகர்களுக்கு இன்னொரு ஆச்சரியம்.. சிவகார்த்திகேயன் மாஸ் பிளான்..!

சிவகார்த்திகேயன் நடித்த 'அயலான்' திரைப்படம்  வரும் பொங்கல் விருந்தாக வெளியாக இருக்கும் நிலையில் இந்த படம் வெளியாகி ஒரு சில நாட்களில் ரசிகர்களுக்கு இன்னொரு இன்ப அதிர்ச்சி கொடுக்க

நான் தான் சார் கோட்டை விட்டுட்டேன்.. பணப்பெட்டியை எடுக்காதது குறித்து கூறிய போட்டியாளர்..!

பிக் பாஸ் வீட்டில் இருந்த ரூ.16 லட்சம் மதிப்புடைய பணப்பெட்டியை பூர்ணிமா எடுத்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியே சென்ற நிலையில் கமலஹாசன் இன்று மற்ற போட்டியாளர்களிடம்

தன்னை விட 6 வயது குறைந்த தென்னிந்திய நடிகருக்கு ஜோடியாகும் கரீனா கபூர்.. யார் அந்த ஹீரோ?

பிரபல பாலிவுட் நடிகை கரீனா கபூருக்கு தற்போது 43 வயதாகும் நிலையில் அவர் தன்னை விட 7 வயது குறைந்த தென்னிந்திய ஹீரோ ஒருவரின் படத்தில் நாயகியாக நடிக்க பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு