உதயம் தியேட்டரை அடுத்து மேலும் 2 தியேட்டர்கள் மூடல்..சினிமா ரசிகர்கள் அதிர்ச்சி..!


Send us your feedback to audioarticles@vaarta.com


சமீபத்தில், சென்னையின் அடையாளங்களில் ஒன்றாக இருந்த உதயம் தியேட்டர் மூடப்பட்டு, தற்போது இடித்து முடிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, மேலும் இரண்டு தியேட்டர்கள் மூடப்பட உள்ளதாக வெளிவந்த செய்தி, சினிமா ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வடசென்னையின் தண்டையார்பேட்டை பகுதியில், கடந்த பல வருடங்களாக செயல்பட்டு வந்த எம்.எம். தியேட்டர் மற்றும் பெரம்பூரில் செயல்பட்டு வந்த ஸ்ரீ பிருந்தா தியேட்டர் ஆகிய இரண்டு தியேட்டர்களும் மூடப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஸ்ரீ பிருந்தா தியேட்டர் 1985ஆம் ஆண்டு திறக்கப்பட்டது. இதை நடிகர் ரஜினிகாந்த் தான் திறந்து வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இந்த தியேட்டரை ரசிகர்கள் அன்போடு "ரஜினி தியேட்டர்" என்று அழைப்பார்கள். இதற்கு காரணமாக, மாப்பிள்ளை, பாண்டியன், அண்ணாமலை உள்ளிட்ட பல ரஜினி படங்கள் இங்கு சூப்பர் ஹிட் ஆனது.
தியேட்டர்களுக்கு வரும் பார்வையாளர்களின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில், மல்டிபிளக்ஸ் தியேட்டர்களே சமாளித்து இயங்கிக் கொண்டிருக்கின்றன. பெரிய சிங்கிள் தியேட்டர்கள் படிப்படியாக மூடப்படுவதால், ரசிகர்கள் பெரும் அதிருப்தி அடைந்துள்ளனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments