தண்ணீர் பக்கெட்டில் கவிழ்ந்த 2 வயது குழந்தை… பரிதாபச் சம்பவம்!

  • IndiaGlitz, [Wednesday,January 27 2021]

சங்கரன்கோவில் பகுதியில் விளையாடி கொண்டிருந்த இரண்டரை வயது குழந்தை ஒன்று தவறுதலாக தண்ணீர் பக்கெட்டில் கவிழ்ந்து உயிரிழந்தது. இச்சம்பவம் அப்பகுதியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. வீட்டில் யாரும் இல்லாத நிலையில் விளையாடி கொண்டிருந்த குழந்தை தவறுதலாக தண்ணீர் பக்கெட்டில் விழுந்ததாகக் கூறப்படுகிறது.

தென் காசி மாவட்டம் சங்கரன் கோவில் பகுதியில் வசித்து வரும் ஜெபாஸ்டியன்- எஸ்தர் தம்பதி இருவருமே தினமும் வேலைக்குச் செல்கின்றனர். இவர்கள் வேலைக்கு செல்லும் நேரத்தில் குழந்தையை பக்கத்து வீட்டு உறவினர்களிடம் விட்டு செல்லுவதை வழக்கமாக கொண்டு உள்ளனர். இந்நிலையில் நேற்று வழக்கம்போல பக்கத்து வீட்டில் குழந்தையை விட்டுவிட்டு இத்தம்பதி வேலைக்கு சென்றதாகக் கூறப்படுகிறது.

இதனால் நேற்று மாலை மற்ற குழந்தைகளுடன் விளையாடி கொண்டு இருந்த ஆரோன் எனும் இரண்டரை வயது குழந்தை வீட்டிற்கு முன்பே வைத்திருந்த தண்ணீர் பக்கெட்டை எட்டிப் பார்த்து இருக்கிறது. இப்படி தலையை மட்டும் உள்ளே விட்டு பார்த்துக் கொண்டு இருந்த குழந்தை ஆரோன் திடீரென தவறுதலாக மல்லாந்து அந்த பக்கெட்டிலேயே விழுந்து இருக்கிறது. இதை பெரியவர்கள் யாரும் கவனிக்காத நிலையில் உடன் விளையாடி கொண்டிருந்த சிறுவர்கள் அக்குழந்தையை தேடி உள்ளனர்.

அப்போது பக்கெட்டில் ஆரோன் விழுந்து கிடந்ததைப் பார்த்து பதறிய சிறுவர்கள் அருகில் உள்ள பெரியவர்களை அழைத்து உள்ளனர். அவர்கள் குழந்தையை மீட்டு தென்காசி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால் குழந்தை ஏற்கனவே மூச்சுத் திணறி உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் கடும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

More News

இது பாலியல்வாதிகளின் உலகம்: இளம் பாடகர் குறித்து சின்மயி சர்ச்சை கருத்து!

விஜய் டிவி சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி சமீபத்தில் தொடங்கிய நிலையில் இந்த நிகழ்ச்சியின் வீடியோ ஒன்றை தனது டுவிட்டரில் பதிவு செய்த பாடகி சின்மயி, 'இது பாலியல்வாதிகளின் உலகம் என்றும்,

இளைஞருக்கு முத்தம் கொடுக்க முயற்சிக்கும் பிக்பாஸ் ஜூலி: வைரல் வீடியோ

பிக்பாஸ் சீசன் 1 நிகழ்ச்சியில் கலந்துகொண்ட போட்டியாளர்களில் ஒருவரான ஜூலி அந்த நிகழ்ச்சியின் மூலம் கடும் விமர்சனங்களை பெற்றார். ஏற்கனவே ஜல்லிக்கட்டு மூலம் புகழ்பெற்றிருந்த ஜூலிக்கு

முடிந்தது 4 ஆண்டுகால சிறைவாசம்… சசிகலா விடுதலை!

சொத்துக் குவிப்பு வழக்கில் 4 ஆண்டு சிறை தண்டனை பெற்று கொரோனா தொற்று காரணமாக பெங்களூரு விக்டோரியா மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த சசிகலா இன்று விடுதலை செய்யப்பட்டார்.

சிவகார்த்திகேயனின் அடுத்த படத்தின் மாஸ் டைட்டில் அறிவிப்பு

நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கவிருக்கும் அடுத்த படத்தின் அறிவிப்பு இன்று காலை 11 மணிக்கு வெளியாகும் என நேற்றே அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி சற்று முன்னர் சிவகார்த்திகேயனின்

விஜய் அரசியலுக்கு வரவேண்டாம்: எஸ்.ஏ.சி அதிரடி பேட்டி!

தளபதி விஜய்யின் தந்தையும் இயக்குனருமான எஸ்ஏ சந்திரசேகர் அவர்கள் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் திடீரென விஜய்யின் பெயரில் அரசியல் கட்சி ஒன்றை தொடங்கி தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்தார்