நீர்வீழ்ச்சி அருகே பாறையில் உட்கார்ந்து செல்பி: இரு இளைஞர்கள் பரிதாப பலி

செல்பி மோகத்தால் ஆபத்தான இடங்களில் செல்பி எடுத்து பலர் தங்கள் உயிரை இழந்து வருவதும் செய்திகளை அவ்வப்போது பார்த்து வருகிறோம். இந்த நிலையில் ஊட்டியில் நீர்வீழ்ச்சி அருகே பாறை ஒன்றின் மீது உட்கார்ந்து இரண்டு இளைஞர்கள் செல்பி எடுத்துக் கொண்டிருந்தபோது திடீரென தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக மரணம் அடைந்த சம்பவம் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஊட்டி அருகே கல்லட்டி என்ற பகுதியை சேர்ந்த கணேசன் மற்றும் சாமுவேல் ஆகிய இரண்டு இளைஞர்கள் தங்கள் நண்பர்களுடன் ஊட்டியில் உள்ள நீர் வீழ்ச்சி ஒன்றில் குளித்துக் கொண்டிருந்தனர். அப்போது கணேசன் மற்றும் சாமுவேல் ஆகிய இருவரும் நீர்வீழ்ச்சி அருகே உள்ள ஒரு குளத்தில் சென்று அங்கு உள்ள ஒரு சின்ன பாறையில் உட்கார்ந்து செல்பி எடுத்துக் கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக இருவரும் தண்ணீரில் மூழ்கி மூழ்கினர்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் மீட்பு படை குளத்தில் இறங்கி இருவருடைய பிணத்தையும் கைப்பற்றினர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். ஆபத்தான இடங்களில் செல்பி எடுக்க வேண்டாம் என்று சமூக ஆர்வலர்கள் பலர் தொடர்ந்து வலியுறுத்தி வந்தும் செல்பி மோகத்தால் பலர் உயிரிழந்து வரும் சம்பவங்கள் தொடர்ந்து நடந்து கொண்டே வருகின்றது. இனிமேலாவது செல்பி எடுப்பவர்கள் ஆபத்தான இடங்களில் எடுக்க வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.

More News

முத்தத்தில் எத்தனை வகை: இயக்குனருக்கு சொல்லி கொடுத்த நடிகை

இம்மாதம் 31ஆம் தேதி வெளியாகவுள்ள திரைப்படங்களில் ஒன்று 'உற்றான்'. ரோஷன், ஹரிரோஷினி நாயகன், நாயகியாக நடித்திருக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பின்போது நடந்த சுவாரஸ்யமான சம்பவம் தற்போது வெளிவந்துள்ளது

'பிக்பாஸ் 3' டைட்டில் வின்னர் குடும்பத்தில் ஏற்பட்ட மிகப்பெரிய இழப்பு

கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய 'பிக் பாஸ் 3' நிகழ்ச்சியில் டைட்டில் வின்னர் ஆக தேர்வு செய்யப்பட்டவர் மலேசியாவை சேர்ந்த முகின் ராவ். இவர் கடைசி சில வாரங்களில் மிகச் சிறப்பாக செயல்பட்டதும்

நயன்தாராவுக்காக மோதிக்கொண்ட இரண்டு இயக்குனர்கள்

லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா கடந்த 2005ஆம் ஆண்டு ஐயா என்ற தமிழ் படத்தில் அறிமுகமானாலும் அதற்கு முன்னரே அவர் மூன்று மலையாள படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

'மாஸ்டர்' டிராக்லிஸ்ட் இணையத்தில் லீக்? அதிர்ச்சியில் படக்குழு!

தற்போதைய தொழில்நுட்ப உலகில் ஒரு திரைப்படம் இண்டர்நெட்டில் லீக் செய்யப்படாமல் உருவாக்குவது, ரிலீஸ் செய்வது என்பது மிகப்பெரிய சவாலாக உள்ளது.

விலங்குகளில் இருந்து பரவும் வைரஸ் தொற்றுகள் – அதன் வகைகள் குறித்த ஒரு தொகுப்பு

மனிதர்களின் வாழ்க்கை இயற்கை சூழலிலிருந்து தொடங்கியது எனலாம்.