close
Choose your channels

இயக்குனர் கொடுத்த பட்டத்தை வாங்க மறுத்த உதயநிதி!

Wednesday, February 20, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கோலிவுட் திரையுலகம் உள்பட அனைத்து திரையுலகிலும் பிரபல நடிகர்கள் தங்களுடைய பெயருக்கு முன் பட்டம் போட்டு கொள்வதை வாடிக்கையாக்கி வருகின்றனர். சூப்பர் ஸ்டார் முதல் பலவகையான பட்டங்கள் திரையில் டைட்டிலாக ஜொலித்து வருகிறது.

இந்த நிலையில் இயக்குனர் சீனுராமசாமி தனது படங்களின் நாயகர்களுக்கு பட்டம் வழங்கி வருவது வழக்கம். சமீபத்தில் கூட அவர் விஜய்சேதுபதிக்கு 'மக்கள் செல்வன்' என்ற பட்டத்தை அளித்தார். இந்த பட்டம் அவரது அடுத்தடுத்த படங்களுக்கும் தொடர்ந்து வருகிறது.

இந்த நிலையில் சீனுராமசாமி இயக்கத்தில் 'கண்ணே கலைமானே' படத்தில் நடித்த உதயநிதிக்கும் அவர் 'மக்கள் அன்பன்' என்ற பட்டத்தை டைட்டிலில் குறிப்பிட்டிருந்தார். ஆனால் இதனை கேள்விப்பட்ட நடிகர் உதயநிதி அதை எடுத்துவிடும்படி கூறியுள்ளார். பட்டம் என்பது நம்மை தேடி வரவேண்டும் என்றும் பட்டங்களை நாம் தேடி போகக்கூடாது என்றும் சினிமாவில் நடிப்பதை தகுதியாக வைத்து தரப்படும் படங்கள் மீது தனக்கு உடன்பாடு இல்லை என்றும் கூறியுள்ளார்.

மேலும் தாத்தாவுக்கு 'கலைஞர்', அப்பாவுக்கு 'தளபதி' போன்ற பட்டங்கள் எல்லாம் மக்களிடம் கிடைத்த அங்கீகாரத்தால் அதுவாக வந்தது என்றும், அரிதாரம் பூசி நடிக்கும் நடிகர்களுக்கு எதுக்கு பட்டம் என்றும் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.