close
Choose your channels

சின்னத்திரை நடிகர் சங்கத்திற்கு உதயநிதி செய்த நிதியுதவி

Tuesday, April 14, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக ஏற்கனவே 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு முடிந்திருந்த நிலையில் தற்போது மேலும் மே 3 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த 21 நாட்களில் திரைப்பட படப்பிடிப்பு எதுவும் நடைபெறவில்லை என்பதால் பெப்சி அமைப்பை சேர்ந்த சினிமா தொழிலாளர்கள் மிகவும் திண்டாட்டத்தில் இருந்தனர். ஆனால் அவர்களுக்கு உதவும் வகையில் பிரபல நடிகர் நடிகைகள் மற்றும் திரையுலகைச் சேர்ந்த பலரும் உதவி செய்தனர். இதனை அடுத்து பெப்சி தொழிலாளர்களுக்கு நிதி குவிந்தது என்பது தெரிந்ததே.

அதேபோல நடிகர் சங்கத்தில் உள்ள நலிந்த நடிகர்களுக்கும் பல முன்னணி நடிகர் நடிகைகளும் உதவி செய்தனர் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் திரைப்படத் துறையில் உள்ள நடிகர் நடிகைகள் போலவே சின்ன துறையில் உள்ள பல நடிகர்களும் கஷ்டப்பட்டு வருவதாகவும் அவர்களுக்கு நிதி உதவி செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடப்பட்டது. இந்த கோரிக்கையை ஏற்று பல நடிகர்கள் பணமாகவும் மளிகை பொருட்களாகவும் சின்னத்திரை நடிகர் நடிகர்களுக்கு உதவி செய்தனர்.

இந்த நிலையில் தற்போது கொரோனா வைரஸ் தடுப்பு பணிகளால் பாதிக்கப்பட்ட சின்னத்திரை நடிகர்களுக்கு உதவும் வகையில் நடிகரும் தயாரிப்பாளருமான உதயநிதி ஸ்டாலின் 1 லட்சம் ரூபாய் நிதியுதவியை சின்னத்திரை நடிகர் சங்கத்திற்கு வழங்கியுள்ளார். இதனையடுத்து சின்னத்திரை கலைஞர்கள் உதயநிதிக்கு தங்களது நன்றியை தெரிவித்துள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.