'கர்ணன்' படத்தில் நடந்த தவறை சுட்டிக்காட்டிய உதயநிதி: மாரி செல்வராஜின் பதில் என்ன?

  • IndiaGlitz, [Tuesday,April 13 2021]

சமீபத்தில் வெளியான தனுஷின் ’கர்ணன்’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளது என்பதும் இந்த திரைப்படத்தை ரசிகர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் கொண்டாடி வருகின்றனர் என்பதும் இந்த திரைப்படம் மிகப்பெரிய அளவில் வசூலிலும் சாதனை செய்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் இந்த படத்தை பார்த்த உதயநிதி படத்திற்கு பாராட்டு தெரிவித்ததோடு அதில் நடந்த ஒரு தவறையும் சுட்டிக்காட்டி உள்ளதாகவும் அந்த தவறை ஓரிரு நாட்களில் திருத்தி விடுவதாக இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் வாக்குறுதி கொடுத்துள்ளதாகவும் உதயநிதி தனது டுவிட்டரில் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:

கர்ணன்’ பார்த்தேன். ஒடுக்கப்பட்ட மக்களின் வலியையும், மறுக்கப்பட்ட அவர்களின் உரிமையையும் மிகைப்படுத்துதல் இன்றி எடுக்கப்பட்டுள்ள இப்படம் கொண்டாடப்பட வேண்டியது. நண்பர் தனுஷ், அண்ணன் தாணு, இயக்குநர் மாரி செல்வராஜ் மூவரிடமும் பேசி அன்பையும் வாழ்த்தையும் தெரிவித்தேன்.

மேலும் 1995 அதிமுக ஆட்சியில் நடந்த கொடியன்குளம் கலவரத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இப்படத்தில் அச்சம்பவம் 1997ல் கழக ஆட்சியில் நடந்ததாக காட்டப்பட்டுள்ளது. இதனை தயாரிப்பாளர், இயக்குநரிடம் சுட்டிக்காட்டினேன். அந்தத் தவறை இரு தினங்களில் சரிசெய்துவிடுகிறோம்’ என உறுதியளித்தனர். நன்றி. என உதயநிதி பதிவு செய்துள்ளார்.

More News

இந்தியாவில் ஸ்புட்னிக் வி தடுப்பூசிக்கு அனுமதி...!

ஏழ்மை நாடுகள் மற்றும் வளரும் நாடுகள் உட்பட பலரும் ரஷ்யாவின் இந்தியாவில் ஸ்புட்னிக் வி தடுப்பூசியை பயன்படுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

பெரியார் சாலைக்கு பெயர் மாற்றம்? கடும் கண்டனம் வெளியிட்ட வைகோ!

சென்னை ரிப்பன் மாளிகையில் அருகே தொடங்கும் நெடுஞ்சாலைக்கு இதுவரை ஈ.வெ.ரா நெடுஞ்சாலை என்றே பெயர் இருந்து வந்தது.

கொரோனா- கோயில்களில் நடக்கும் திருமணங்களுக்கு புது கட்டுப்பாடு!

இந்தியாவில் கொரோனா பாதிப்பு நேற்று ஒரேநாளில் ஒன்றரை லட்சத்தைத் தாண்டி இருக்கிறது.

காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் சரமாரி கத்திக்குத்து… இளைஞரின் வெறிச்செயல்!

திண்டுக்கல் மாவட்டத்தில் முறைப் பெண்ணை திருமணம் செய்வதற்கு தடையாக இருந்தார்

டாப் ஆங்கிளில் ரம்யா பாண்டியனின் கருப்பு-வெள்ளை புகைப்படங்கள்!

பிக்பாஸ் சீசன் 4 போட்டியாளர்களில் ஒருவரான ரம்யா பாண்டியன், பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னரும் தனது சமூக வலைத்தளத்தில் அவ்வப்போது போட்டோஷூட் புகைப்படங்களை பதிவு செய்து வருகிறார்