close
Choose your channels

இதுதான் என் முகவரி, தைரியம் இருந்தால் ரெய்டு நடத்துங்கள்: உதயநிதி சவால்

Friday, April 2, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழகத்தில் தேர்தல் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் இன்று காலை முதல் திமுக தலைவர் ஸ்டாலின் மகள் செந்தாமரை உள்பட பலரது வீடுகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர். குறிப்பாக ஸ்டாலின் மகள் வீட்டில் கடந்த 12 மணி நேரமாக சோதனை நடந்து வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் தேர்தல் நடைபெறும் நேரத்தில் திமுகவினர்களை குறிவைத்து வருமான வரித்துறை சோதனை நடத்தி வருவதாக தேர்தல் கமிஷனிடம் திமுக புகார் அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இன்று திருப்பூர் மாவட்டம் உடுமலையில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், ‘இன்று எனது சகோதரி வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை செய்துகொள்ளனர். நான் வருமான வரித்துறைக்கு சவால் விடுகிறேன். என் வீட்டு முகவரியை தருகிறேன். தைரியமிருந்தால் என் வீட்டுக்கு ரெய்டுக்கு வாருங்கள் என்று கூறியுள்ளார். இந்த உதயநிதி மட்டுமல்ல, இங்கு உள்ள திமுக தலைவர்கள் யாரும் இந்த வருமான வரி பூச்சாண்டிக்கு பயப்பட மாட்டார்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

உதயநிதி ஸ்டாலினின் சவாலை ஏற்று அவரது வீட்டுக்கு வருமானவரித்துறையினர் சோதனை செய்வார்களா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Related Videos