"வன்முறை என்போரை விட்டுவிடுங்கள்.. ஆனால் இது உரிமைக்கான போராட்டம்" - உதயநிதி ஸ்டாலின்.

  • IndiaGlitz, [Friday,December 20 2019]

 

உரிமைக்கான போராட்டத்தைக் கண்டு 'வன்முறை' என்று அஞ்சும் வசதியான, வயதான பெரியவர்களைச் சரியான பாதுகாப்புடன் வீட்டிலேயே விட்டுவாருங்கள் என தி.மு.க இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

மத்தியில் ஆட்சி செய்யும் பா.ஜ.க கடந்த ஆட்சியில் நிறைவேற்ற முடியாமல் போன குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை, தற்போது பெரும்பான்மை பலத்துடன் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியுள்ளது. இந்த மசோதாவிற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன.இந்நிலையில், குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக சென்னையில் வரும் 23ம் தேதி தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் பேரணி நடைபெற உள்ளது. இந்தப் பேரணியில் அனைத்துக் கட்சியினரும், பொதுமக்களும் பங்கேற்பார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தி.மு.க தலைமையில் நடைபெறும் பேரணியில் மக்கள் நீதி மய்யம் பங்கேற்கும் என கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

மேலும் போராட்டத்திற்கு ஜனநாயக அமைப்பினர், தொழிற்சங்கத்தினர் ஆகியோருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த போராட்டத்தில் அனைத்து தரப்பினரும் கலந்துகொள்ளுமாறு தி.மு.க இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், ட்விட்டர் மூலம் அழைப்பு விடுத்துள்ளார்.

அதில், “தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில் 23ம்தேதி சென்னையில் நடைபெறும் #CAA2019 எதிர்ப்பு பேரணியில் அனைவரும் பங்கெடுப்போம். உரிமைக்கான போராட்டத்தைக் கண்டு 'வன்முறை' என்று அஞ்சும் வசதியான, வயதான பெரியவர்களைச் சரியான பாதுகாப்புடன் வீட்டிலேயே விட்டுவரவும்” எனத் தெரிவித்துள்ளார்.

 

More News

லெஜண்ட் சரவணன் படத்தின் பாடல் காட்சி! இத்தனை கோடி செலவா?

சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர் லெஜண்ட் அருள் சரவணன் நடிக்கும் படத்தின் பூஜை சமீபத்தில் நடைபெற்றது என்பது தெரிந்ததே இந்தப் படத்தை அஜித், விக்ரம் நடித்த உல்லாசம் படத்தை இயக்கிய

உதவியாளர்களுக்கு கிறிஸ்துமஸ் விருந்து கொடுத்த பி.ஆர்.ஓ

கிறிஸ்துமஸ், தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகையின்போது திரையுலகினர் தங்களிடம் பணிபுரியும் பணியாளர்களுக்கு விருந்து வைத்து பரிசு கொடுப்பது வழக்கமாக இருந்து

"இந்தியக் குடியுரிமைலாம் எங்களுக்கு வேணாம்..! உண்மையான இந்து இந்த சட்டத்தை ஏற்க மாட்டான்". பாகிஸ்தான் இந்து கவுன்சில் அறிவிப்பு.

திருத்தப்பட்ட குடியுரிமைச் சட்ட மசோதாவுக்கு, எதிராக மேற்கு வங்கம் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் போராட்டம் வெடித்துள்ளது. புதிய சட்டத்துக்கு எதிராக டெல்லி ஜாமியா பல்கலைக்கழக மாணவர்கள் பேரணியில்,

கைக்குழந்தையுடன் கணவர் வீட்டின் முன் தர்ணா செய்த இளம்பெண்: அதிர்ச்சி காரணம்

தென்காசி அருகே இளம்பெண் ஒருவர் கைக்குழந்தையுடன் கணவன் வீட்டின் முன் உட்கார்ந்து தர்ணா செய்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது 

முதல்முறையாக திமுகவுடன் கைகோர்க்கும் கமல்ஹாசன்!

திமுகவுடன் மக்கள் நீதி மையம் கட்சி முதல் முதலாக கைகோர்த்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது