திமுகவில் தனக்கு எந்த இடம்: உதயநிதி விளக்கம்

  • IndiaGlitz, [Wednesday,September 26 2018]

நேற்று நடைபெற்ற கூட்டம் ஒன்றில் பேசிய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, திமுக ஒரு கட்சி அல்ல என்றும், அது ஒரு கம்பெனி என்றும், அதிமுகவில் ஒரு சாதாரண தொண்டன் கூட தலைமை பொறுப்பை ஏற்கலாம் என்றும், ஆனால் திமுகவில் வாரிசுகள் மட்டுமே தலைமை பொறுப்பை ஏற்க முடியும் என்றும் மு.க.ஸ்டாலின் மற்றும் உதயநிதியை மறைமுகமாக தாக்கி பேசினார்.

இதற்கு தனது சமூக வலைத்தளத்தில் நடிகரும், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் மகனுமான உதயநிதி விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறியதாவது: வரிசையில் தான் நிற்கின்றேன், கலைஞரின் உயிரினும் மேலான இயக்கத்தின் கடைமட்ட தொண்டனுக்கு பின்னால், தலைவனாய் அல்ல, அவனுக்கும் தொண்டனாய் சேவை ஆற்றவே! சுயமரியாதை இழந்த அடிவருடிகளுக்கும், முதுகெலும்பில்லாத அடிமைகளுக்கும் எங்கள் இயக்கத்தை பற்றி பேச துளி கூட தகுதி இல்லை.. என்று உதயநிதி பதிவு செய்துள்ளார்.

உதயநிதியின் இந்த கருத்துக்கு பெரும்பாலான நெட்டிசன்கள் வரவேற்பும் ஒருசிலர் எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர்.

More News

சிவகார்த்திகேயனின் அடுத்த பட தலைப்பு 'மோதி விளையாடு பாப்பா'

சிவகார்த்திகேயன் படம் என்றாலே குழந்தைகள் விரும்பும் படம் என்பது அனைவரும் அறிந்ததே. அந்த வகையில் பெண் குழந்தைகளின் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு குறும்படம்

விஷாலுக்கு நன்றி சொன்ன ஸ்ரீரெட்டி! ஏன் தெரியுமா?

கோலிவுட், டோலிவுட் திரையுலக பிரபலங்கள் முதல் சச்சின் தெண்டுல்கர் வரை பாலியல் குற்றச்சாட்டுக்களை அடுக்கடுக்காக சுமத்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியவர் தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி.

696 நாட்களுக்கு பின் மீண்டும் கேப்டனாகிய தல தோனி

கிரிக்கெட் ரசிகர்களின் தல என்று அழைக்கப்படும் தோனி இன்று நடைபெறும் இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் நாடுகளுக்கு இடையிலான போட்டியில் மீண்டும் கேப்டன் ஆகியுள்ளார்

கருணாஸ் சட்டமன்ற உறுப்பினராக நீடிக்க வேண்டுமா? அமைச்சர் ஜெயகுமார்

சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே ஆர்ப்பாட்டம் ஒன்றில் கலந்து கொண்ட நடிகரும் எம்.எல்.ஏவுமான கருணாஸ், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக கைது செய்யப்பட்டார்.

பொங்கல் ரேஸில் இணைகிறதா ரஜினியின் 'பேட்ட'

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் 'பேட்ட' படத்தின் படப்பிடிப்பு தற்போது உத்தரபிரதேசம் மாநிலத்தில் நடைபெற்று வருகிறது.