close
Choose your channels

மனிதனுக்கு வரிவிலக்கு மறுப்பு. உதயநிதியின் அதிரடி முடிவு

Saturday, April 30, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com
கடந்த பொங்கல் தினத்தில் வெளியான உதயநிதி ஸ்டாலின் நடித்த 'கெத்து' படத்திற்கு வரிவிலக்கு தர தமிழக அரசு மறுத்ததும், இதற்காக உதயநிதி பதிவு செய்த வழக்கு ஒன்று நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது என்பதும் அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் உதயநிதி ஸ்டாலின் மீண்டும் ஒரு வழக்கை அதே காரணத்திற்காக பதிவு செய்யவுள்ளார்.

உதயநிதி ஸ்டாலின் தயாரித்து நடித்த 'மனிதன் 'திரைப்படம் நேற்று வெளியாகி பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்றுள்ள நிலையில் இந்த படத்திற்கு வரிவிலக்கு கேட்டு விண்ணப்பம் செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் நேற்று இந்த படத்திற்கு வரிவிலக்கு தர தமிழக அரசு அதிகாரிகள் மறுத்துள்ளனர். மனிதன் என்பது தமிழ்ச்சொல் இல்லை என்றும் மாந்தர், மாந்தன் என்பதே தமிழ் சொற்கள் என்றும் அவர்கள் இதற்கு விளக்கம் அளித்திருந்தனர்.
இந்நிலையில் 'மனிதன்' படத்திற்கு வரிவிலக்கு கேட்டு வரும் திங்கள் அன்று நீதிமன்றத்தில் வழக்கு தொடரவுள்ளதாக உதயநிதி ஸ்டாலின் தன்னுடைய சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார். இந்த வழக்குகள் வெற்றி பெறுமா அல்லது தோல்வி பெறுமா என்பது குறித்து தனக்கு கவலை இல்லை என்றும், இருப்பினும் தனது போராட்டம் தொடரும் என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.