கொரோனா பாதிப்பினால் மருத்துவமனையில் அனுமதிப்பட்ட பிரிட்டன் பிரதமர்!!!

  • IndiaGlitz, [Monday,April 06 2020]

 

பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு கடந்த 10 நாட்களுக்கு முன்னரே கொரோனா பாதிப்பு இருப்பது உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் நேற்று மாலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதை அந்நாட்டு செய்தி நிறுவனமான டவுனிங் ஸ்ட்ரிட் உறுதிப்படுத்தியிருக்கிறது.

கொரோனா நோய்த்தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டநிலையில் அவருக்கு, வீட்டிலேயே சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் உடல் வெப்பநிலை அதிகமாகியிருப்பதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார். மேலும், அந்நாட்டு செய்தி நிறுவனமொன்று, கொரோனாவின் அடுத்தக்கட்ட பரிசோதனைக்காக லண்டன் மருத்துவமனை ஒன்றிற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். பிரதமரின் மருத்துவ ஆலோசகரின் அறிவுறுத்தலின்பேரில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது எனவும் தெரிவித்துள்ளது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்காக பிரதமர் மருத்துமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டுள்ளதை அடுத்து அந்நாட்டு வெளியுறவு செயலாளர் இன்று ஒரு ஆலோசனை கூட்டத்தை தலைமையேற்று நடத்தவுள்ளார். மேலும் இதுகுறித்து, அமெரிக்க அதிபர் ட்ரம்ப், பிரிட்டன் பிரதமர் கொரோனா தொற்றுடன் போராடி மீண்டு வரவேண்டும், அமெரிக்க மக்கள் அவர் உடல்நிலை தேறிவருவதற்காக இறைவனை வேண்டுகிறார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.

More News

பெப்சி தொழிலாளர்களுக்காக 'பிகில்' தயாரிப்பாளர் கொடுத்த மிகப்பெரிய தொகை

நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதை அடுத்து சினிமா படப்பிடிப்புகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளதால் ஆயிரக்கணக்கான சினிமா தொழிலாளர்கள் வறுமையில் வாடுகின்றனர்.

ரூ.30 ஆயிரம் கோடிக்கு பட்டேல் சிலை விற்பனையா? ஆன்லைன் விளம்பரத்தால் பரபரப்பு!

உலகின் மிகப்பெரிய சிலையான சர்தார் வல்லபாய் படேலை சிலையை கடந்த 2018ஆம் ஆண்டு பிரதமர் மோடி அவர்கள் குஜராத் மாநிலத்தில் திறந்து வைத்தார் என்பது தெரிந்ததே.

முதல் முறையாக மிருகங்களுக்கும் கொரோனா வைரஸ் தொற்று: அதிர்ச்சித் தகவல் 

சீனாவின் வூகான் என்ற மாகாணத்தில் ஆரம்பித்த கொரோனா வைரஸ் சீனாவை மட்டுமின்றி உலகிலுள்ள 190 நாடுகளில் பரவி ஆயிரக்கணக்கான உயிர்கள் பலியாகி வருவது மட்டுமின்றி

'கோபேக் சைனா வைரஸ்': தீப்பந்தம் ஏந்தி திடீரென கோஷம் போட்டதால் பரபரப்பு

கொரோனா வைரசுக்கு எதிராக இந்திய அரசு கடந்த சில நாட்களாக தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டு இருக்கும் நிலையில் அரசுக்கும் அரசு நிர்வாகத்திற்கும் பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்

நேற்றிரவு 9 மணியின் சாட்டிலைட் புகைப்படம்: இணையத்தில் வைரல் 

பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் நேற்று இரவு 9 மணிக்கு மின் விளக்குகளை அணைத்துவிட்டு அகல் விளக்குகளை ஏற்ற கூறினார் இந்த நிகழ்வை கோடிக்கணக்கான இந்தியர்கள் நிகழ்த்தி நாட்டின் ஒற்றுமையை நிரூபித்தனர்