close
Choose your channels

போதையில் டார்ச்சர் தாங்கல… கணவனை கொலைசெய்து, நன்றாக உப்புபோட்டு கழுவி, பிரிட்ஜில் வைத்த மனைவி!!!

Friday, August 7, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

போதையில் டார்ச்சர் தாங்கல… கணவனை கொலைசெய்து, நன்றாக உப்புபோட்டு கழுவி, பிரிட்ஜில் வைத்த மனைவி!!!

 

ஊரடங்கு காரணமாக உலகம் முழுவதும் குடும்ப வன்முறை அதிகரித்து காணப்படுவதாக பெண்கள் அமைப்பு தொடர்ந்து கூறிவருகிறது. இந்நிலையில் ரஷ்யாவின் பிரபல பாப் படகரான அலெக்சாண்டர் யுஷ்கோ தினமும் குடித்துவிட்டு தனது மனைவி மெரினா குஹாவை கொடுமைப் படுத்தியதாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த குஹா அவரை கொலை செய்ய திட்டமிட்டதாக அவரே விசாரணையில் ஒப்புக் கொண்டிருக்கிறார். கத்தி, சுத்தியல், ரம்பம் போன்றவற்றை தயார் செய்து, எப்போதும் போல குடித்துவிட்டு வந்து அடித்த அலெக்சாண்டரை கொலை செய்து, வாஷிங் மெஷில் உப்பு போட்டு நன்றாக கழுவி பின்னர் தனது பிரிட்ஜில் வைத்தாகவும் கூறப்படுகிறது. இத்தனையும் குஹா தனது இரண்டு வயது குழந்தைக்கு முன்னால் செய்ததுதான் மிகப்பெரிய கொடுமையே.

அலெக்சாண்டரின் நண்பர்கள் பலமுறை தொலைபேசியில் அழைத்தபோது பதில் இல்லாததால் சந்தேகம் அடைந்து காவல் துறைக்கு தகவல் கொடுத்துள்ளனர். அப்போது போலீசார் அலேக்சாண்டர் வீட்டில் சோதனை நடத்தியபோது இந்த பகீர் தகவல் வெளியாகி இருக்கிறது. தீவிர மன அழுத்தத்தில் இருந்த மெரினா குஹா விசாரணையில் தனாகவே தனது குற்றத்தையும் ஒப்புக் கொண்டிருக்கிறார். உலகம் முழுவதும் இதுபோன்ற குடும்ப வன்முறைகள் அதிகரித்து வருவது குறித்து ஐ.நா. அமைப்பு முதற்கொண்டு அனைத்து அமைப்புகளும் தற்போது வருத்தம் தெரிவித்து வருகின்றன. ஊரடங்கு காலங்களில் வெளியில் இருக்கும் மன அழுத்தங்களை ஆண்கள், பெண்கள் மீது திணிப்பது குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும் எனவும் பலரும் ஆலோசனை கூறிவருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.