போதையில் டார்ச்சர் தாங்கல… கணவனை கொலைசெய்து, நன்றாக உப்புபோட்டு கழுவி, பிரிட்ஜில் வைத்த மனைவி!!!

  • IndiaGlitz, [Friday,August 07 2020]

 

ஊரடங்கு காரணமாக உலகம் முழுவதும் குடும்ப வன்முறை அதிகரித்து காணப்படுவதாக பெண்கள் அமைப்பு தொடர்ந்து கூறிவருகிறது. இந்நிலையில் ரஷ்யாவின் பிரபல பாப் படகரான அலெக்சாண்டர் யுஷ்கோ தினமும் குடித்துவிட்டு தனது மனைவி மெரினா குஹாவை கொடுமைப் படுத்தியதாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த குஹா அவரை கொலை செய்ய திட்டமிட்டதாக அவரே விசாரணையில் ஒப்புக் கொண்டிருக்கிறார். கத்தி, சுத்தியல், ரம்பம் போன்றவற்றை தயார் செய்து, எப்போதும் போல குடித்துவிட்டு வந்து அடித்த அலெக்சாண்டரை கொலை செய்து, வாஷிங் மெஷில் உப்பு போட்டு நன்றாக கழுவி பின்னர் தனது பிரிட்ஜில் வைத்தாகவும் கூறப்படுகிறது. இத்தனையும் குஹா தனது இரண்டு வயது குழந்தைக்கு முன்னால் செய்ததுதான் மிகப்பெரிய கொடுமையே.

அலெக்சாண்டரின் நண்பர்கள் பலமுறை தொலைபேசியில் அழைத்தபோது பதில் இல்லாததால் சந்தேகம் அடைந்து காவல் துறைக்கு தகவல் கொடுத்துள்ளனர். அப்போது போலீசார் அலேக்சாண்டர் வீட்டில் சோதனை நடத்தியபோது இந்த பகீர் தகவல் வெளியாகி இருக்கிறது. தீவிர மன அழுத்தத்தில் இருந்த மெரினா குஹா விசாரணையில் தனாகவே தனது குற்றத்தையும் ஒப்புக் கொண்டிருக்கிறார். உலகம் முழுவதும் இதுபோன்ற குடும்ப வன்முறைகள் அதிகரித்து வருவது குறித்து ஐ.நா. அமைப்பு முதற்கொண்டு அனைத்து அமைப்புகளும் தற்போது வருத்தம் தெரிவித்து வருகின்றன. ஊரடங்கு காலங்களில் வெளியில் இருக்கும் மன அழுத்தங்களை ஆண்கள், பெண்கள் மீது திணிப்பது குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும் எனவும் பலரும் ஆலோசனை கூறிவருகின்றனர்.

More News

'வலிமை' படப்பிடிப்பு குறித்து அஜித் எடுத்த அதிரடி முடிவு!

தல அஜித் நடிப்பில் உருவாகி வந்த திரைப்படம் 'வலிமை'. இந்த படத்தின் இரண்டு கட்ட படப்பிடிப்பு நடைபெற்று முடிந்த நிலையில் திடீரென கொரோனா வைரஸ் காரணமாக படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டது

நவம்பரில் பள்ளிகள் திறக்க வாய்ப்பு! காலாண்டு அரையாண்டு தேர்வுகள் ரத்தா?

கொரனோ வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் நான்கு மாதங்களாக பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்படவில்லை என்பதும் பத்தாம் வகுப்பு உள்பட அனைத்து வகுப்பு மாணவர்களும் தேர்வு எழுதாமல் தேர்ச்சி

ஊரடங்கு நேரத்தில் அக்சயகுமார் படப்பிடிப்பிற்காக லண்டன் சென்ற தமிழ் நடிகர்!

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த நான்கு மாதங்களாக திரையரங்குகள் திறக்கப்படவில்லை என்பதும் திரைப்பட படப்பிடிப்பு நிறுத்தப்பட்டு உள்ளது என்பதும் தெரிந்ததே

லோகேஷ் கனகராஜ் அடுத்த படத்தில் கார்த்தி அல்லது சூர்யா? பரபரப்பு தகவல்

மாநகரம், கைதி ஆகிய இரண்டு வெற்றி படங்களை அடுத்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தளபதி விஜய் நடித்த 'மாஸ்டர்' திரைப்படத்தை இயக்கியுள்ளார்.

ரஜினி இல்லாமலேயே ஆரம்பமாகும் 'அண்ணாத்த' படப்பிடிப்பு?  பரபரப்பு தகவல் 

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில், சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் பிரமாண்டமான தயாரிப்பில் உருவாகி வரும் திரைப்படம் 'அண்ணாத்த'.