close
Choose your channels

அந்த மூன்று வருடங்கள்: த்ரிஷாவின் மலரும் நினைவுகள்!

Saturday, November 21, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரான த்ரிஷா கடந்த 2017 ஆம் ஆண்டு நவம்பர் 20ஆம் தேதி யூனிசெப் இந்தியாவின் நல்லெண்ண தூதராக பதவியேற்றதையடுத்து தற்போது அந்த பதவியை ஏற்று மூன்று வருடங்கள் நிறைவு பெற்று விட்டதை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பெருமையுடன் குறிப்பிட்டுள்ளார் 

தமிழகத்தில் குழந்தைகளை நலனைப் பேணுவதும், குழந்தைகள் நலன்களை மேம்படுத்துவது மற்றும் குழந்தைகளுக்கு ஏற்படும் இழப்புகளை குறைப்பது உள்ளிட்ட பணிகளில் யுனிசெப் அமைப்பு ஈடுபட்டு வருகிறது. குழந்தைகள் நலனை மேம்படுத்துவதற்காக சமூக பங்களிப்பு மற்றும் ஒருங்கிணைந்த சமூக கொள்கை அணுகுமுறை மூலம் சமூக சூழலை உருவாக்கி வலுப்படுத்துவதே இந்த அமைப்பின் நோக்கம் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் யுனிசெப் அமைப்பின் இந்தியாவின் நல்லெண்ண தூதராக த்ரிஷா கடந்த 2017 ஆம் ஆண்டு நவம்பர் 20ஆம் தேதி நியமனம் செய்யப்பட்டார். அதன் பிறகு அவர் யுனிசெப் அமைப்பின் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் நேற்றுடன் அவர் யுனிசெப் நல்லெண்ண தூதராக பதவியேற்று 3 வருடங்கள் நிறைவு பெற்றதை அடுத்து அதன் மலரும் நினைவுகள் குறித்த ஒரு வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் த்ரிஷா பகிர்ந்துள்ளார். அந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.