மத்திய உள்துறை அமைச்சருக்கு கொரோனா தொற்று உறுதி: அதிர்ச்சி தகவல்

கொரோனா வைரஸால் எம்பிக்கள், எம்.எல்.ஏக்கள் உள்பட பல விஐபிக்கள் பாதிக்கப்பட்டு வரும் நிலையில் தற்போது மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்களுக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவிற்கு கடந்த சில நாட்களாக கொரோனா அறிகுறி இருந்ததாகவும், இதனையடுத்து அவருக்கு பரிசோதனை செய்ததில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.

மேலும் தனக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளதாக உள்துறை அமைச்சர் அமித்ஷா தனது டுவிட்டரில் உறுதி செய்துள்ளார். எனவே சமீபத்தில் தன்னை சந்தித்தவர்கள், தங்களை தனிமைப்படுத்திக் கொள்ளவும் என்றும் அமித் ஷா அறிவுரை வழங்கி உள்ளார்.

இந்த நிலையில் தொற்று உறுதியானதையடுத்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அமித்ஷா அனுமதிக்கப்பட்டுள்ளார். அமித்ஷா அவர்களுக்கு மிக லேசான அறிகுறி மட்டுமே இருப்பதாகவும், இருப்பினும் மருத்துவரின் அறிவுரையின்படி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அவருடைய உடல் சீராக இருப்பதாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் கூறுகின்றன.

More News

தமிழக ஆளுனருக்கு கொரோனா தொற்று உறுதி: தனியார் மருத்துவமனை அறிக்கை

தமிழக ஆளுநர் மாளிகையில் பணிபுரிந்து வந்த ஊழியர்கள் சிலருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதை அடுத்து இன்று காலை தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அவர்கள் சென்னை ஆழ்வார்பேட்டையில்

கொரோனாவில் இருந்து குணமானார் அமிதாப்: அபிஷேக் நிலை என்ன?

பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் மற்றும் அவரது மகன் அபிஷேக் பச்சன் ஆகிய இருவரும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டனர் என்பதும் அதனை தொடர்ந்து ஐஸ்வர்யாராய் மற்றும் ஆராத்யா

'பாகுபலி' மகிழ்மதி நாட்டின் பெயரில் இயக்கம் ஆரம்பித்த நடிகரின் மகள்!

பிரபல நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா சத்யராஜ் ஊட்டச்சத்து நிபுணர் என்பதும் அவர் விரைவில் ஒரு இயக்கம் ஆரம்பித்து சமூக சேவை செய்யவிருப்பதாகவும் வெளிவந்த தகவலை ஏற்கனவே பார்த்தோம்.

ஜீன்ஸ் பேண்டிற்குள் புகுந்த பாம்பு: 7 மணி நேரம் நின்று கொண்டே இருந்த வாலிபரால் பரபரப்பு

வாலிபர் ஒருவரின் ஜீன்ஸ் பேண்டுக்குள் பாம்பு ஒன்று புகுந்து விட்டதால் அந்த வாலிபர் பாம்பு வெளியே வரும் வரை ஏழு மணி நேரம் நின்று கொண்டே இருந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 

திடீரென கிளம்பிய இளம்பெண்ணின் BMW கார்: நாய்க்குட்டியால் ஏற்பட்ட விபத்து

டெல்லியில் இளம் பெண் ஒருவர் BMW காரில் உட்கார்ந்திருந்த நிலையில் திடீரென அவருடைய நாய்க்குட்டி துள்ளி குதித்ததால் அதிர்ச்சி அடைந்து தவறுதலாக ஆக்சிலரேட்டரை மிதித்தார்.