இந்த அரசியல் நாகரீகம் தமிழகத்திற்கு எப்போது வரும்?

தமிழகத்தில் திராவிட அரசியல் கட்சிகள் காலூன்றிய பின்னர் எதிர்க்கட்சிகளை எதிரிக்கட்சிகள் போல் பார்ப்பதும், ஆளும் கட்சி தலைவர்களும், எதிர்க்கட்சி தலைவர்களும் பொதுமேடையில் சந்தித்தால் கூட கண்டுகொள்ளாமல் இருப்பதும் நிகழ்ந்து வருகிறது.

இந்த நிலையில் நேற்று திருவனந்தபுரம் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் சசிதரூர், கோவில் ஒன்றில் நடந்த துலாபார நிகழ்ச்சியில் கலந்து கொண்டபோது எதிர்பாராத வகையில் துலாபார தராசு அவருடைய தலையில் விழுந்ததால் அவர் படுகாயம் அடைந்தார்.

இந்த நிலையில் சிகிச்சைக்காக திருவனந்தபுரம் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டிருந்த சசிதரூரை இன்று மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். பரபரப்பான தேர்தல் பணியிலும் எதிர்க்கட்சி வேட்பாளர் ஒருவர் காயம் அடைந்ததை அறிந்து நேரில் சென்று பார்த்த நிர்மலா சீதாராமனை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.

இந்த நிலையில் இதுகுறித்து சசிதரூர் தனது சமூக வலைத்தளத்தில், 'தேர்தல் பிசியிலும் அமைச்சர் நிர்மலா சீதாராமன் என்னை நேரில் சந்தித்து நலம் விசாரித்தது என்னை நெகிழ செய்துவிட்டது. நிர்மலா சீதாராமன் ஒரு நல்ல அரசியல்வாதி' என்று தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சியினர்களை எதிரியாக நினைக்காத இந்த நாகரீக அரசியல் தமிழகத்திலும் நிகழ வேண்டும் என்பதே அனைவரின் ஆசை! அது நடக்குமா?
 

More News

ரூ.75 லட்சம் கொடுக்காவிட்டால் கிட்னியை விற்றுவிடுவேன்: தேர்தல் ஆணையத்திற்கு வேட்பாளர் மிரட்டல்

தேர்தல் செலவுக்காக ரூ.75 லட்சம் பணம் கொடுக்காவிட்டால் கிட்னியை விற்றுவிடுவேன் என தேர்தல் ஆணையத்திற்கு சுயேட்சை வேட்பாளர் ஒருவர் மிரட்டல் விடுத்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

கமல்ஹாசனை குறி வைத்து அடிக்கும் கரு.பழனியப்பன்?

கடந்த சில நாட்களாக திமுக கூட்டணிக்கு ஆதரவாக பிரச்சாரம்  செய்து வரும் இயக்குனர் கரு.பழனியப்பன், சமீபத்தில் பேட்டி ஒன்றில் கூறியபோது

மாம்பழமா? மாபெரும் பழமா? யாருக்கு ஓட்டு குறித்து பார்த்திபன் பதிவு

தமிழகத்தில் மக்களவை தேர்தல் நாளை மறுநாள் நடைபெறவுள்ள நிலையில் இன்றுடன் தேர்தல் பிரச்சாரம் முடிகிறது.

23 வருடங்களுக்கு பின் பிரபுவுடன் ஜோடி சேரும் நடிகை!

கடந்த 1996ஆம் ஆண்டு இயக்குனர் சீமான் இயக்கத்தில் பிரபு நடித்த 'பாஞ்சாலங்குறிச்சி' திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தவர் 'ரோஜா' புகழ் மதுபாலா.

அருள்நிதியின் 'K13' சென்சார் தகவல்

கடந்த ஆண்டு அருள்நிதி நடித்த 'இரவுக்கு ஆயிரம் கண்கள்' என்னும் த்ரில் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றதை அடுத்து அவர் நடித்து வரும் திரைப்படங்களில் ஒன்று 'K13'